Powered By Blogger

Wednesday, 28 September 2016

கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாணவர்கள்

கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாணவர்கள்  

 தமிழகத்தில் 2011ம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்தபோது அதில் கணினி பாடத்திட்டமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதற்காக 6 முதல் 10ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அந்த பாடத்திட்டத்தை முழுவதும் ரத்து செய்துவிட்டு புத்தகத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கணினி பயிற்சி அளிக்கிறோம் என்பதை தங்களது சிறப்பம்சமாக எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1992 முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் கணினி படிப்பு முடிக்காதோர் கடந்த 2008ல் நீக்கப்பட்டனர்.பல்கலை.களில் 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில் பிஎஸ்சிக்கு பிறகு பிஎட் படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆன்லைன் படிப்புக்கும் ஐசிடி எனப்படும்கணினி வழி தொழில்நுட்ப கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனத்தால் ஐசிடி கல்வி படிப்பில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லாமல், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் ஏன் தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி பாடத்தை மற்ற பாட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர்.சில பள்ளிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். ஆனால் அவர்கள் நடத்தும் பாடம் புரியாமல் மாணவர்கள் பரிதவித்துவருகின்றனர். உலகமே கணினிமயமாக மாறி வரும் காலக்கட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் பல பள்ளிகளில் கணினி ஆசிரியர் இல்லாமலும், அல்லது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கணினி பாடத்தை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அதேபோல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவரவில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இது கணினி அறிவியலின் ஆர்வம்தான். ஆனால் மாணவர்கள் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்ந்தவுடன், இந்த பாடத்தில் ஏன் சேர்ந்தோம் என்று வேதனைபடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் கணினி ஆசிரியர்கள் இல்லாதது தான். சில பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 1 வகுப்பில் கணினி பாடப்பிரிவையே ரத்து செய்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் கல்விதான் பாதிக்கிறது. தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது தொழில்நுட்பம். ஆனால் அரசு பள்ளி மாணவர்களிடையே பள்ளிக் கல்வித்துறை கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்காமல் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கணினி அறிவியல் பாடத்திற்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற அச்சம் கணினி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்த பொதுத்தேர்வு மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுஒருபுறமிருக்க அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கிளாஸ், ஆன்லைன் வகுப்புகள், என அரசு பள்ளிகளில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.ஆனால் ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கணினி ஆசிரியர்கள் இல்லாததது பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கான கட்டிடப்பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடப்பணிகள் முடிவடைவதற்குள்அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம்தருவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை கணக்கெடுத்து கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.39,019 பேர் காத்திருப்புதமிழகத்தில் 1992ம் ஆண்டிலிருந்து கணினி பட்டதாரிகளில் ஆண்கள் 9,579 பேர், பெண்கள் 29,440 பேர் உட்பட 39,019 பேர் பிஎட் கணினி அறிவியல் பாடத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்து வீட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வையும் எழுத அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன? 

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:

                    பகுதி - I

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர
கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)    

                                      

                    பகுதி - II

                             (4 வகை படிவங்கள்: வெள்ளை நிற கவர்கள்) (கீழ் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து வெள்ளை நிற கவரில் வைக்கவும். ஒட்டக் கூடாது. மண்டல அலுவலர் சரி பார்த்த பின்பு தான் ஒட்ட வேண்டும்.) 1. படிவம் 17 C  (3 பிரதிகள் தயார் செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் இருக்கும் அனைத்து முகவர்களுக்கும் ஒரு நகல் தர வேண்டும். மிக முக்கியமான படிவம்.) 2. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உறுதி மொழி படிவம் - 3 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 3 முறை  உறுதி மொழி அறிக்கையை படிக்க வேண்டும்.  (மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் முறையான வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலை 7 மணிக்கு / வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு / வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை உரிய பெட்டியில் வைத்து அரக்கு வைத்து மெட்டல் சீல் வைத்தவுடன்)இப்படிவத்தில் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெற வேண்டும்.   3.  வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு 4. தேர்தல் பார்வையாளரின் 16 விவரங்கள் அடங்கிய குறிப்புரை

                                         

                         பகுதி - III 

              (5 வகை பொருள்கள்/படிவங்கள்:  பச்சை நிற கவர்கள்)

(இவை சட்டப்பூர்வமான கவர்கள்: பச்சை நிறத்தில் இருக்கும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இவற்றை கவரில் வைத்து முகவர்கள் முன்னிலையில் ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும். இந்த கவர்கள் மீது முகவர்கள் கையொப்பமிட விரும்பினால் அனுமதிக்க வேண்டும். கவரின் பின்புறம் கையொப்பம் இட சொல்ல வேண்டும். கீழ்க் கண்ட 5 கவர்களையும் பூர்த்தி செய்து பச்சை நிற பெரிய கவரில் போட வேண்டும்.)


1. முதல் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியல்  (The sealed cover containing the marked copy of the Electoral roll) 2. இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்  பதிவு செய்த 17 A பதிவேடு   (The sealed cover containing Register of Voters - FORM 17A) 3. மூன்றாம்  வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டு (வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையும், மூன்றாம்  வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டுகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்)   


 (The sealed cover containing Voters slip) 4. பயன்படுத்தப் படாத Tendered Ballot Papers.   (The sealed cover containing Unused Tendered Ballot Papers.) 5 பயன்படுத்தப் பட்ட  Tendered Ballot Papers மற்றும் விவரப் பட்டியல்  (படிவம் 17B)

 (The sealed cover containing Used Tendered Ballot Papers and list in 17B.)

                                  *

                    பகுதி - IV

                
  (11 வகை பொருள்கள்/படிவங்கள் மஞ்சள்  நிற கவர்கள்)  (இவை சட்டபூர்வ முறைமையற்ற  கவர்கள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த கவர்களை ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும்.) 1. சரிபார்த்தலுக்காக வழங்கப்பட்ட பிற வாக்காளர் பட்டியல்கள்ம்  ( The sealed cover containing the copy or copies of electoral roll - other than the marked copy)2. முகவர்களின் நியமனக் கடிதம் படிவம் 10 ( The sealed cover containing the appointment letters of polling Agents in Form 10)

3. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பணிசான்றை (EDC Certificate) பயன்படுத்தி, பணிபுரியும் வாக்கு சாவடியிலேயே வாக்கை பதிவு செய்திருந்தால், அவரிடம் உள்ள பணிசான்றினை பெற்று இந்த கவரில் வைத்து அரக்கு வைக்க வேண்டும். 


( The sealed cover containing the Elction Duty Certificates in Form 12 B) 4. Challenged ஓட்டு அளித்தவர்களின் விவரப் பட்டியல் படிவம் 14  ( The sealed cover containing the list of Challenged Votes in Form 14)

5. கண்பார்வை இல்லாதவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் வாக்களிக்க துணையாக வருவோர் வாக்குப் பதிவு ரகசியத்தை காப்பேன் என  உறுதிமொழி அளிக்கும் கடிதம். படிவம் 14 A.


 ( The sealed cover containing the list of Blind and inform Electors in Form 14A and the declaration of the companion)6. தோற்றத்தில் 18 வயதை விட குறைவானவர் போல தோற்றம் அளித்தால், வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரிடம் விசாரணை செய்து, அவரிடம் பெற்ற  உறுதி மொழிக் கடிதம் மற்றும் இதுபோல வந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டதா? மறுக்கப் பட்டதா? என்ற விவரப் பட்டியல்   


 ( The sealed cover containing the declarations obtained from the Electors as to their age and the list of such Electors)


7. Challenged ஓட்டுக்காக முகவரிடம் பெறப்பட்ட பணம் மற்றும் அதற்கான ரசீது, முகவரிடமிருந்து பெறப்பட்ட தொகை திரும்ப அவருக்கு அளிக்கப் பட்டிருந்தால், முகவரிடம் பெறப்பட்ட ஒப்புதல் ரசீது   


( The cover containing the receipt book and cash, if any, in respect of Challenged votes)8. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பச்சை நிற தாள்கள் ( The cover containing Unused and Damaged Green paper seals) 9. பயன்படுத்தப்படாத வாக்காளர் சீட்டுகள்  ( The cover containing Unused voter slips) 10. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Special Tags. ( The cover containing with Unused and Damaged Special Tags) 11. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Strip Seals.( The cover containing Unused and Damaged Strip Seals.)                               

                                                                                            பகுதி - V

            (7 வகை பொருள்கள்/படிவங்கள் பிரவுன்/காக்கி நிற கவர்கள்)   1. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பயிற்சி கையேடு  (The Hand book for presiding officer) 2. வாக்கு பதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி புத்தகம்  (The manual of instructions for use of Electronic Voting Machines)3. அழியாத மை குப்பி (Indelible Ink set) 4. Stamp Pad 5. மெட்டல் சீல்   (Brass seal for Presiding officer) 6. Tendered வாக்கு அளிக்க வழங்கப்பட்ட ரப்பர் முத்திரை  (Arrow cross mark rubber stamps for marking tendered ballot papers) 7. அழியாத மை குப்பி வைக்க பயன்படுத்தும் Cup (Cup for setting the indelible ink)

                                          ***                                                 

                                                         பகுதி - VI



(பிற வகை பொருள்கள்/பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்) 1. பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்  (Cover containing unused forms) 2. பயன்படுத்தப்படாத துணிகள்/கவர்கள்/பைகள் அனைத்தும்  (Unused canvas bags/cloth) 3. தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட பயன்படுத்தப் படாத பொருள்கள் அனைத்தும்  (Cover containing any other papers directed to be kept by the Returning officer in a sealed packet) 4. வாக்களிக்கும் அறைக்காக வழங்கப்பட்ட அட்டைகள், குண்டூசி, மற்ற எழுது பொருள்கள் அனைத்தும்   (All other items, if any should be packed in to the fourth packet)மேற்கண்ட பட்டியல் படி தயார் செய்து வைத்திருந்தால் மண்டல அலுவலர் வரும் போது தேர்தல் பொருள்களை விரைவாக ஒப்படைத்து விடலாம்.  உங்கள் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துக்கள்!  

ALL TRS TN.. Siva

Monday, 26 September 2016

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை செய்ய வேண்டியவை

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை செய்ய வேண்டியவை  

முதலில்கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டுசீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில்டிக் அடிக்க வேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும்சின்னத்தில் படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டைA என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில்வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில்பண்ணக்கூடாது.*
13A என்றுஒரு படிவம் இருக்கும். அதைசரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்தசான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம்அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்கவேண்டும்.

பின்னர்A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிறஅலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டுஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை
படிவம்13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டுஅலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

படிவம்13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரிகூட வைத்து விடக்கூடாது

மேலும்சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்துதெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால்வாக்கு கூட செல்லாத வாக்காகஇருக்கக்கூடாது

ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல். 

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. 

இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது.

வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்டகல்வித் துறை வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்
உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. 


இந்த தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு கடந்த வாரமே அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியருக்கு ஒரு ஊராட்சியை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று 26ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற வேண்டும். அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். 

அன்று வரை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையும் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஆசிரியர்கள் காலாண்டு விடுமுறையில் தேர்தல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் பணி செய்யும் ஊரின் தேர்தல் பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியானதால், ஏற்கெனவே தேர்தல் பணிக்கான உத்தரவு பெற்று வெளியூர் சென்றிருந்த ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் நேற்று அவசர அவசரமாக தங்களுக்கான ஊராட்சிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 
குறிப்பாக பெண் ஆசிரியர்கள், மாற்று திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் உடனடியாக சம்பந்தப் பட்ட மைய த்துக்கு செல்ல முடியமால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு தேவை யான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை. 

Sunday, 25 September 2016

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள் 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044  23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி    tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்
நேரடி 044 2363 5050
044 23635010 விரிவு  2005
முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
நேரடி 044-2363 5014
044-2363 5010 விரிவு  3000
முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)
நேரடி 044-2363 5015
044-2363 5010 விரிவு  3004
மாநில தேர்தல் அலுவலர்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் 044 24323794 24343205
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையர் 044 28513259 28518079
பேரு்ராட்சிகளின் இயக்குநர் 044 25340352 25358742
சட்ட ஆலோசகர் (மேல் முறையீட்டு அலுவலர்)
நேரடி 044-2363 5013
044-2363 5010 டூ விhpவு 2008
நிதி ஆலோசகர் (ம) தலைமை கணக்கு அலுவலர்
நேரடி 044-2363 5012
044-2363 5010 விரிவு  3001
தலைமை நிர்வாக அலுவலர் (பொது தகவல் அலுவலர்)
நேரடி 044-2363 5016
044-2363 5010 விரிவு  3006
மக்கள் தொடர்பு அலுவலர்
நேரடி 044-2363 5017
044-2363 5010    விரிவு  3002
கணினி நிரலர் 044-263 5010 விரிவு  2009
கண்காணிப்பாளர் (நிர்வாகம்) 044-2363 5010 விரிவு  4001
கண்காணிப்பாளர் (ஊராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  4003
கண்காணிப்பாளர் (நகராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  3008
கண்காணிப்பாளர் (சட்டம்) 044-2363 5010 விரிவு  3003
கணினி அறை 044- 2363 5010 - விரிவு  2009
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி - தொலையச்சு எண்கள்
மாவட்ட ஆட்சியர்  மாவட்டம் மாவட்டத் தேர்தல்  அலுவலாpன் பதவியிடம் அலுவலக தொலைபேசி எண் தொலையச்சு  எண்
சென்னை மாநகராட்சி ஆணையர் 044 25381330 2538396
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் 0422 2301114 2216630
கடலு}ர் மாவட்ட ஆட்சியர் 04142 230999 230555
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342 230500 230886
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 0451 246119 2432132
ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424 2266700 2262444
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 044 27237433 27238477
கன்னியாகுமாp மாவட்ட ஆட்சியர் 04652 279555 260999
கரு்ர் மாவட்ட ஆட்சியர் 04324 257555 257800
கிருக்ஷ;ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343 239500 239300
மதுரை மாவட்ட ஆட்சியர் 0452 2531110 2533272
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் 04365 252700 254058
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 04286 281101 281106
பெரம்பலு}ர் மாவட்ட ஆட்சியர் 04328 276300 277875
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 04322 221663 221690
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 04567 231220 231220
சேலம் மாவட்ட ஆட்சியர் 0427 2452233 2400700
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 04575 241466 241581
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 04362 230102 230857
நீலகிரி மாவட்ட ஆட்சியர் 0423 2442344 2443971
தேனி மாவட்ட ஆட்சியர் 04546 253676 251466
திருவள்ளு்ர் மாவட்ட ஆட்சியர் 044 27661600 27661200
திருவாரு்ர் மாவட்ட ஆட்சியர் 04366 223344 221033
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 0461 2340600 2340606
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் 0431 2415358 2411929
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 0462 2501222 2500224
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 04175 233333 222148
வேலு}ர் மாவட்ட ஆட்சியர் 0416 2252345 2253034
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 04146 222450 222470
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 04562 252525 252500
தொடர்புடைய இணைய இணைப்புகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இனையதளம்  http://www.tnsec.tn.nic.in/
மாநில தேர்தல் அலுவலர்கள்
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை  www.tnrd.gov.in
மாநில தேர்தல் அலுவலர் , ஆணையர்இ நகராட்சி நிர்வாகத்துறை
www.tn.gov.in/cma
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ பேரூராட்சிகள் துறை
www.tn.gov.in/dtp

ஆதார்:' ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

'ஆதார்:' ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
'ஆதார் விபரம் பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கடைகள் மூலம், மக்களிடம் இருந்து, ஆதார் விபரம் பெறப்படுகிறது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிய, கடைக்கு வருவோரிடம், 'கருவி வேலை செய்யவில்லை' எனக்கூறி, ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர். சென்னையில், சேப்பாக்கம் உட்பட, 12 இடங்களில், கூட்டுறவு ரேஷன் ஊழியர்களுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை பயன்படுத்துவது குறித்து, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதில், சிலர் தீவிரமாக உள்ளனர்; அதற்கு, ரேஷன் ஊழியர்கள் துணை போகக்கூடாது. 'பாயின்ட் ஆப் சேல் கருவி' இயங்கவில்லை என்றால், உடனே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்; மாற்று கருவி வழங்கப்படும். ஆதார் பதிவுக்கு வருவோரை, திருப்பி அனுப்புவதாக புகார் வந்தால், ஊழியர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பு எடுக்கலாம் RTI தகவல்👆

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பு எடுக்கலாம் RTI தகவல்👆



'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம் 

சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.


மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.
இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

Saturday, 24 September 2016

CRC Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​


Thursday, 22 September 2016

YOUR AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD THIS TNEPSD APP.

This is new app to know your ration stock add YOUR AADHAAR CARD FAMILY
 DETAILS DOWNLOAD THIS TNEPSD APP.



அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம்.*

அரசாணை.எண்..234 நிதித்துறை...நாள் 01-06-2009 ஆல் ஊதிய முரண்பாடு ஏற்பட்டால் அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம்.* *சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு W.P.No.31084/2015*.  

CLICK HERE-IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 01.10.2015 CORAM THE HONOURABLE MR.JUSTICE M.SATHYANARAYANAN W.P.No.31084 of 2015

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும். காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில், தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல், நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்’கில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கை: ‘வாட்ஸ்அப்’ உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது டெல்லி ஐகோர்ட்டில் ‘வாட்ஸ்அப்’ விளக்கம்!!!

பேஸ்புக்’கில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கை: ‘வாட்ஸ்அப்’ உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது டெல்லி ஐகோர்ட்டில் ‘வாட்ஸ்அப்’ விளக்கம்!!!
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ நிறுவனம், ‘வாட்ஸ்அப்’பை விலைக்கு வாங்கி உள்ளது. அதையடுத்து, கடந்த மாதம் 25–ந் தேதி, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. ‘வாட்ஸ்அப்’பில் அதன் 
உறுப்பினர்கள் வெளியிடும் தகவல்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் என்பதே அந்த கொள்கை. இதை ஏற்காதவர்கள், செப்டம்பர் 25–ந் தேதிக்குள் அக்கொள்கையில் இருந்து விலகலாம் என்றும் வாட்ஸ்அப் அறிவித்தது.இதை எதிர்த்து, கர்மன்யா சிங் சரீன், ஸ்ரேயா சேத்தி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த கொள்கையால் தங்களது அந்தரங்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், எனவே, தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர்.இந்த மனு, தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ‘வாட்ஸ்அப்’ தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நாங்கள் பயன்படுத்தும் குறியீடுகளால், செய்தியை பெறுபவர் மட்டுமே அதை படிக்க முடியும். மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. ஒருவர் தனது வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்து விட்டால், அவரது ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களும் எங்கள் சர்வரில் இருந்து நீக்கப்பட்டு விடும்’ என்று கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா கூறியதாவது:–வாட்ஸ்அப்பின் புதிய கொள்கையால், உறுப்பினர்களின் அந்தரங்கத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாது. அவர்கள் அனுப்பும் தகவல்களை மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்க விரும்பாமல் விலகியவர்களின் எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளப்படாது. அவர்கள் வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்துவிட்டால், அவர்களின் ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களை சர்வரில் இருந்து நீக்கி விடுவோம். எதையும் வைத்துக்கொள்ள மாட்டோம்.ஒருவர் அனுப்பும் தகவல், அதைப் பெறுபவருக்கு ‘டெலிவரி’ ஆனவுடன், அது நீக்கப்பட்டு விடும். ‘டெலிவரி’ ஆகாமல் இருந்தால், 30 நாட்கள்வரை சர்வரில் இருக்கும். அதன்பிறகும் ‘டெலிவரி’ ஆகாவிட்டால், நீக்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.அதையடுத்து, இவ்வழக்கில், நாளை (வெள்ளிக்கிழமை) உரிய உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்
* கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
* மாணவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்
* காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

Thursday, September 22, 2016
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?
ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, 20 September 2016

10th quarterly key answers - 2016

10th quarterly key answers - 2016
10th quarterly key answers download

Maths key answers...

CLICK HERE..Maths key answers Download ......

MathsCLICK HERE... Key Answers Download.....

 English Answer key  Download... 

 CL8CK HERE.. English Paper - I Key Answer Download ....version - 1 (1 page)

 CLICK HERE..English Paper - I Key Answer Download ....version - 2 (4 pages)

 CLICK HERE..English paper - I key Answer Download (Chinnapparaj) Image result for new gif

 CLICK HERE..English paper - II  key Answer Download (Chinnapparaj)Image result for new gif

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!
வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!

தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தின் பல இடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு தற்காலிக கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் 746 தனியார் பள்ளிகளுக்கும் மீண்டும் அனுமதி வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 746 பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்ய தமிழக அரசு குழுவுக்கு, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாகக் கூறினார். மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதில் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலை குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.