Powered By Blogger

Wednesday 14 September 2022

Tams தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கல்வி அமைச்சரை சந்தித்து வாழ்த்து கூறியது.


 *தமிழ்நாடு சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்...*

மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்.

திருப்பத்தூர் மாவட்டம்.

Thursday 13 August 2020

10 th one mark online

*🎯🎓10th 1 mark online test* 
பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே 1 மதிப்பெண் வினாக்களை online test எழுதி பார்க்க வசதியாக *zeal centum study* 
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு வழிகளில் book back & creative questionsஅடங்கிய வினாத்தொகுப்பை வழங்கியுள்ளோம் அனைத்து மாணவர்களும் பயன்படுத்த பகிர்ந்து அனைவரும் 100/100 பெற நல்வழி அமைப்போம் 🙏🙏🙏

 
 *💥🎯Speciality of this online test* 
*❖ Book Back & Creative questions* 
*❖ Nearly 200 questions for each unit* 
*❖ Questions auto shuffle* 
*❖ Answer options auto shuffle* 
*❖ Know your score atonce* 
*❖ Retry option enabled for unlimited attempts*
*❖ Check solutions options available*  

Sunday 26 January 2020

Alltrstnsiva Term 3 Lesson Plan Collection for 6,7,8

term 3 lesson plan(6,7,8,9&10)

Alltrstnsiva  Term 3 Lesson Plan Collection

January 4th week (27/1/2020 to 31/01/2020)
Tamil lesson plan collection(6,7,8)

6 th std Tamil
https://drive.google.com/open?id=10FSHJuGwkip2eu96Au2JxSseB2CdhDvT
7 th std Tamil
https://drive.google.com/open?id=1Tjy1GEjWMXEa30DzC8dyDfUiAxMLXVdn
8 th std Tamil
https://drive.google.com/open?id=1WZBemvPO2-7GthvmrMG6uapHk1yD0AX2

English lesson plan collection(6,7,8)
6 th std English
https://drive.google.com/open?id=1jbiJUxUL0Lvno7MGYdtvKQRfsc--Ak1g
7 th std English
https://drive.google.com/open?id=1BEQyA0H91Jt39UICRYO0-nQbgwc8wQ9f
8 th std English
https://drive.google.com/open?id=16-PPDl4ddzgA1my71gBmNZDRgkne5z68
Maths lesson plan collection(6,7,8,) Jan 4th  week

6 th std MathsTm
https://drive.google.com/open?id=1d6kMxLW7clAloeFnqAPStKzrj7Wi3nPB
7 th std Maths Tm
https://drive.google.com/open?id=13mzwMa5NxaZXoRydW2mL9Myk0JqAL0vQ
8 th std Maths Tm
https://drive.google.com/open?id=1PDh2pnAgvncaAVKfwtdj546MYUinEGcN
Science lesson plan collection(6,7,8,)

6 th std Science
https://drive.google.com/open?id=1c97ZP2486r3892J5O96skc6QM7nO1Omm
7 th std Science
https://drive.google.com/open?id=1B0SjS2pZVOMZwa-6I5HpdMdkeWU-eIEO
8 th std Science
https://drive.google.com/open?id=1-qwlx66ly2GTspzpcq4sZ7UmSlrDLHaU
Social science lesson plan collection(6,7,8,)

6 th std social science
https://drive.google.com/open?id=1oAs7Agmw1G4cGTbp9rh5_gJrYB0LSAky
7 th std social science
https://drive.google.com/open?id=1FhJlTB33zeXO7iVybzGAw4koQ9-d49Bp
8 th std social science
https://drive.google.com/open?id=1aLfc9PeNhsEJAF8ijIobeZq-b7HD4A8v

Siva tams Ldr tpt

Monday 18 November 2019

EMIS ல் Time Table copy செய்வது எவ்வாறு என்பதை விளக்கம்

EMIS ல் வார வாரம் TIME TABLE. UPDATE செய்துவிடீர்களா!!!
*இன்று 18-11-2019 EMIS ல் SCHOOL தலைப்பிற்கு சென்று ,TIME TABLE TOUCH செய்து உட்பிரிவில் முதலில் உள்ள COPY TIME TABLE TOUCH செய்து, OPTION 1 ல் வகுப்புகளுக்கு நேராக உள்ள ASSIGN MASTER TIME TABLE TOUCH செய்த பிறகு, VIEW CLASS TIME TABLE ல் சென்று CLASS   WISE  CHECK செய்து, இந்த வாரம் TIME TABLE உருவாக்கி விட்டீர்களா என பாருங்களேன்ஆசிரியர் நண்பர்களே!!!*

*REFERENCE காணொளி* 👇

https://youtu.be/48gV96tUwrs

Siva tams Ldr tpt, vellore

Saturday 19 October 2019

தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் குறித்து புதிய அறிவுரைகள்

தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் குறித்து புதிய அறிவுரைகள் - DEO Proceedings 18-10-2019.



மு. சிவக்குமார் தலைவர் திருப்த்தூர் ஒன்றியம்

Thursday 17 October 2019

பயோமெட்ரிக் வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்

பயோமெட்ரிக் வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்



மொபைலில்  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை
நாளைய மாற்றத்துடன்
Step 1
1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்

பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்

பின் Device ஐ இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்

guide Video
நாளைய மாற்றத்துடன்
https://youtu.be/f4tj2G8fiDY

இது போன்ற செய்திகளுக்கு இணைந்திடுகள்

மு.சிவக்குமார், ப.ஆ
Tams Ldr tpt blk

NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம்

NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்





By Siva tams Ldr tpt
NMMS GRP Tirupattur




Wednesday 16 October 2019

2019-20 NMMS செய்தி* தேசிய திறனாய்வு பதிவேற்றம் செய்வது குறித்து ஒரு சிறு விளக்கம்

NMMS செய்தி* தேசிய திறனாய்வு பதிவேற்றம் செய்வது குறித்து ஒரு சிறு விளக்கம்

*NMMS செய்தி*
www.alltrstnsiva.blogspot.in

தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஆன்லைன் பதிவேற்றம் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2019 20 ஆண்டுகால மாணவர்களுடைய Emis விவரங்கள் அப்டேட் செய்யப்படவில்லை. தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை No Available என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஒவ்வொரு விவரமும் நாம் டைப் செய்து நமினல் ரோல் பதிவேற்றம் செய்யலாம். Emis அப்டேட் செய்யப்பட்ட பிறகு அவருடைய Emis நம்பர் ஐ கிளிக் செய்தால் அவருடைய மொத்த விவரங்கள் online அப்ளிகேஷனில் தெரியும் வேலை சுலபமாக முடியும் என்பதால் Emis அப்டேட் செய்யும்போது நாம் செய்தால் வேலை குறைவு ஓரிரு நாட்களில் Update செய்து விடுவார்கள். மேலும் print எடுக்கும் போது Emis காலத்தில் Blank காக காட்டும் என்பதால் Emis Update செய்தால் பிறகு Online ல் பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பு.
Emis update செய்யவில்லை என்றாலும் தேர்வர்களுக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் இதனால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. கண்டிப்பாக ஆல் டிக்கெட் பிரின்ட் ஆகும். Emis காலத்தில் வெறுமனே இருக்கும் அவ்வளவுதான் இதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை.

 என்றும் நட்புடன்

மு. சிவக்குமார் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
 திருப்பத்தூர் வட்டம்
வேலூர் மாவட்டம்

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இம்மாத இறுதியில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) செயல்பட்டு வருகிறது. இக்கவுன்சில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்ட புத்தகங்களை விநியோகித்து வருகிறது. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட உள்ள நிலையில், அதன் அடிப்படையில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் ஹிருஷிகேஷ் சேனாபதி கூறுகையில், ''தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 1975, 1988, 2000, 2005ல் மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 5வது முறையாக பாடத்திட்டத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்படுவதற்காக காத்திருக்கிறோம். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இதற்கான குழு இம்மாத இறுதியில் அமைக்க  உள்ளது

ஆசிரியர்களுக்கு 2019 விருதுகளும், பாராட்டுப் பத்திரங்கள் என்பது *விழுப்புண்களும்... துரோக விருதுகளும்...!* ஆசிரியரின் குரல்

* வே. அண்ணாதுரை,*
மாநில துணைச் செயலாளர் மற்றும்
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

# *விழுப்புண்களும்... துரோக விருதுகளும்...!*

# அரசு, தனியார் உட்பட பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு விருதுகளும்,  பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன...!
இது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் சிறப்பான பணியினை ஊக்கப்படுத்துவதாகவும், மேலும் பணி சிறக்க உதவும் வகையிலும் அமைகிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
# ஆனால்...
ஜனவரி 2019 ல் ஜாக்டோ-ஜியோ தமது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது...
வெற்றிகரமாக தொடங்கிய போராட்டம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்தது. பின்னடைவிற்கு முக்கிய காரணமும் நாம் தான்...
மேலும் ஒரு ஊதிய உயர்விற்காக அளவுக்கதிகமாக விசுவாசம் காட்டிய சில வட்டாரக்கல்வி அலுவலர்களும்...
# போகட்டும்... போராட்ட முடிவுவெறும் பின்னடைவோடு போயிருந்தால் நாம் யாரும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது போல் நடந்தவை எதுவுமே நினைவில் இல்லாமல் அவரவர் வேலையை கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே அது போல் கடந்து போய் விடலாம்...
ஆனால்... ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிறைச்சாலைகளில் அடைபட்டும்... வேதனைபட்டும்... அவர்களது குடும்பங்கள் சொல்லொணா துயரப்பட்டும்... மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 17A,17B பெற்றும் இன்றளவும் அதனாலான பாதிப்புகளில் இருந்து மீளாமல் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
# ஆனால்... இதனைப் பற்றி துளி கூட கவலையோ, அக்கறையோ, நன்றி உணர்வோ இல்லாமல் ஆசிரியர்கள் சுயநலமாய் செயல்படுவது மிகுந்த வெட்கத்துக்குரிய மற்றும் கவலைக்குரிய செயலாகும்.
# இதன் உச்சக்கட்டமாக, பாதிக்கப்பட்ட ஆசிரியரின் பணியிடத்தையே குறிபார்த்த குள்ள நரிகள் கூட்டத்தையும் நாம் சந்திக்க வேண்டிய அவலம் கூட நேர்ந்தது.
# அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார்கள் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காகவும், தற்பெருமைக்காவும், வீண் புகழுக்காகவும் ஆசிரியர்கள் அலறித் துடித்து பறப்பது சொல்லொணா துயரத்தை உண்டாக்குகிறது.
# சிறைச்சாலை சென்று மீண்டவர்கள்,17A, 17B வாங்கி இன்றளவும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யாரும் அவர்களது சொந்த ப்ரச்னைக்காகவோ, தங்களது சுயதலத்திற்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ இந்த தண்டனைகளை பெறவில்லை. நமது ஆசிரியர் சமுதாயத்திற்காக இந்த தண்டனை முள் கிரீடத்தை ஏற்றுள்ளனர்.
# ஆனால், இது குறித்த உணர்வோ, அக்கறையோ, துளியும் பொறுப்புணர்வோ இல்லாமல் கலந்தாய்வுக்காக கவலைப்படுவதும், பாதிக்கப்பட்ட சகோதரனின் பணியிடங்களை பறிக்கப் பார்ப்பதுமாக துரோக வேலை அவர்கள் நெஞ்சில் பாய்ச்சுகின்றனர்.
# மேலும், அரசு மற்றும் தனியார் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காவும் வரிசை கட்டி நிற்பதும், கை கட்டி நின்று கெஞ்சுவதும் அதனை பெருமையாய் விளம்பரபடுத்துவதுமாய் எத்தனை தம்பட்டம், எத்தனை எத்தனை சுயநலம்?
இதயம் கனக்கிறது...! வலிக்கிறது...!
# உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த போராட்டத்தில் சிறைச்சாலை சென்றவர்கள், 17A, 17B பெற்றவர்கள் இனி எப்போதும் விருது பெற முடியாது என்பது...! நமக்காக, முகமறியா சகோதர, சகோதரிகளுக்காக, ஆசரிய சமுதாயத்திற்காக போராடி, பாதிக்கப்பட்டு நிற்பவரும், அவரது குடும்பத்தினரும் நமது கண்முன் தெரியவில்லை என்றால் கண்ணிருந்தும் நாம் குருடர்கள் தான்... காதிருந்தும் செவிடர்கள் தான்...!
# அவர்களுக்காக, அவர்களது தியாகத்திற்காக ஒரு தடவை மட்டும், கொஞ்ச காலம் அதாவது அவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும் வரையிலாவது இந்த விருதுகளை உங்களால் புறக்கணித்திருக்க முடியாதா?
எனது சகோதரர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அரசோ, தனியாரோ வழங்கும் எந்த விருதையும் ஏற்க மாட்டோம் என ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் ஒரு குரலில் புறக்கணித்திருந்தால் நமது ஒற்றுமையும், உணர்வும் ஒரு துளியாவது அரசாங்கத்திற்கு உரைத்திருக்கும்...
# ஆனால்.. எங்கெங்கும் ஜால்ராக்களின் சத்தம் காதைப் பிளக்கிறது... அந்த ஜால்ரா சத்தம் காதில் துரோக ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது...!
# இன்னும் ஒரு படி மேலே போய்... யார் நம்மை பழி வாங்கனார்களோ, இன்னும் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையே அழைத்து விழா நடத்துவதும், அவர்களுக்கு சத்தமாக ஜால்ரா போடுவதும், அவர்களை வானளாவ புகழ்வதுமாக பெரும் அசிங்கங்கள் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
# கொஞ்சமேனும் உணர்வுள்ளவர்கள், ஒரு துளியேனும் நன்றி உள்ளவர்கள், நமது சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காக ஒரு நொடியாவது மனதார வருத்தப்படுபவர்கள், நமது வாழ்வாதார கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு தினந்தோறும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதற்காக ஒரு நொடி கவலைப்படுபவர்கள்  இது போன்ற விருதுகளை புறந்தள்ளியிருப்பார்கள்...
# இவையெல்லாம் விருதுகள் அல்ல... எனது சகோதரர்களின் விழுப்புண்களில் பாய்ச்சப்படும் துரோக விஷம் தடவிய குத்தீட்டிகள்...!
அவைகளின் பெயர் விருதுகள் அல்ல... நமது துரோகத்தின் அவமான நினைவுச் சின்னங்கள்..!!
# விருது என்ற பெயரில் நம்மை திசை திருப்பும், நமது உணர்வுகளை மழுங்கடிக்கும், நம் கண்களை நமது கைகளாலேயே குத்திக் கொள்ளும் ஈனச் செயல்களை அரசும், தனியாரும் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன..!
# ஒரு எழுத்தாளர் பாதிக்கப்பட்டால் தாம் வாங்கிய அத்தனை விருதுகளையும் அவர்கள் முகத்தில் தூக்கி எறிகிறது மானமுள்ள எழுத்தாளர் கூட்டம்...!
ஆனால்... நன்னெறிகளை, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் கூட்டமோ... மானத்தை விற்று அவமானத்தைப் பரிசாகப் பெற அலைவது கண்டு நெஞ்சம் விம்மி வெடிக்கிறது...!
# இத்தனை துன்பங்களை ஆசிரிய சமுதாயத்திற்காக சுமந்து நிற்கும் எனது சகோதரன் சிந்திய இரத்தம், அதனை மறந்து, பெறும் நன்றி கெட்ட துரோக விருதுகளிலும், பாராட்டுப் பத்திரங்களிலும் படிந்திருக்கும் என்பதையும், அதனை நீ பார்க்கும் போதெல்லாம்... அது உன்னை புழுவை விட கேவலமாகப் பார்க்கும் என்பதையும் மறந்து விடாதே...!
# கலந்தாய்வுகளுக்காக துடிக்கிறோம்...! பதவி உயர்வுக்காக பரபரக்கிறோம்...!!
அது நியாயமாய் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையாய் இருந்தால் அதில் தவறேதுமில்லை... ஆனால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் குற்றச்சாட்டு பெறப்பட்ட நமது சகோதரனுக்குரிய பதவி உயர்வு பணியிடத்தை பறித்துக் கொள்ளப் பார்க்கிறாயே... நீயெல்லாம் மனிதன் தானா? மாறுதல் பணியிடத்திற்கு போரட்ட வீரனின் இடத்திற்கு போகத்துடிக்கிறாயே... கழிவிரக்கம் என்பதே கிடையாதா? நீயெல்லாம் ஆசிரியனாய் இருந்து இந்த குழந்தைகளுக்கு என்ப கற்றுத் தரப் போகிறாய்? இந்த உன்னுடைய நயவஞ்சக புத்தியையும், துரோகத்தையும்... நன்றி கெட்ட குணத்தையுமா?
# ஒரு வேளை... ஏதாவது அதிசயம் நிகழ்ந்து பங்களிப்பு ஓய்வூதியம் இரத்தானால், ஊதிய மாற்றங்கள் நிகழ்ந்தால் தற்போதைய கல்வித் துறை சீரழிவு நிறுத்தப்பட்டால் அது போராட்ட களத்தில் எமது சகோதரர்கள் சிந்திய இரத்தத்தினால் பெறப்பட்டதே ஒழிய... புகழுக்கும், பெருமைக்கும் ஆளாய் பறந்து  நம்பிக்கை துரோகங்களாலும், வஞ்சனகளாலும் பெறப்பட்ட விருதுகளாலோ... பாராட்டுப் பத்திரங்களாலோ அல்ல என்பதை மறந்து விடாதே...!
# பார்ப்போம்...! இனியாவது விருதுகள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற பெயரில் அரசோ, தனியாரோ வழங்கும் துரோக, வஞ்சக நினைவுச் சின்னங்களை எத்தனை பேர் புறக்கணிக்கின்றனர் என்பதை...!
எத்தனை பேர் தாங்கள் ஏற்கனவே பெற்று சுமந்து கொண்டு திரியும் அவமானச் சின்னங்களை விட்டெறியப் போகிறார்களென்று...!!
# இன்னும் சிறிதாய்... என் சகோதரர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வரை எனக்கு பதவி உயர்வு வேண்டாமென்றோ... மாறுதலில் பங்கேற்க மாட்டேனென்றோ சொல்லமாட்டாயா என்ற பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்... ஆசிரியப் பேரினம் செய்திட்ட துரோகங்களை மறந்து... ஆசிரியப் பேரினம் போராட்ட வீரர்களின் முதுகில் குத்திய இரத்தம் படிந்த  நயவஞ்சக கத்தி தரும் மரண வலியோடு!!!!





Tuesday 15 October 2019

அனைவரையும் CPS லிருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் அரசுக்கு உத்திரவு

1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு
1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு

மு.சிவக்குமார், தலைவர்
Tams Tirupattur block.

Online entry Method of NMMS 2019-20

NMMS Online entry

Click Here

http://218.248.44.57/DGE18NMMS/

*_👆🏻மேற்காணும் இணையம் வழியே தற்போது NMMS விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்_*

Step 1:Link Copy செய்து BROWSERஇல் search செய்யவும்.

Step2:
User Name: *_YOUR SCHOOL DISE CODE_*

PASSWORD: *_999999_*

Step 3: click *NOMINAL ROLL REGISTRATION*

(Now Not Open NMMS Regist.19-20. Pls wait. Maybe after 16-10-19)

Siva tams Ldr tpt

Monday 14 October 2019

*தேசிய திறனாய்வு தேர்வு NMMS *திருப்பத்தூர் ஒன்றியத்தில் இரு பயிற்சி வகுப்புகள் இனிதே ஆரம்பம்*



*தேசிய திறனாய்வு தேர்வு NMMS *திருப்பத்தூர் ஒன்றியம்.

திருப்பத்தூர் ஒன்றியம், நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இரு மையங்களில் இனிதே தொடங்கப்பட்டது 🙏

*12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் தொடக்க பள்ளி மற்றும் திருப்பத்தூர் CKS மணி தொடக்க பள்ளி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம் ₹1000 வீதம் 4 ஆண்டுகள் மொத்தம் ₹ 48,000 ரூபாய் ஏழை மாணவர்கள் பயன் பெறுவர். இந்த பயிற்சி வகுப்பு  விடுமுறை நாட்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டு மையத்தில் சிறப்பாக NMMS வகுப்புகள் இனிதே துவங்கி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மிட்டூர் மையத்தில் நடைபெற்ற  விழாவிற்கு புதூர் மரிமானிகுப்பம் அ.ஜெகதீசன்,ப.ஆ தலைமை தாங்கினார், மைய ஒருங்கிணைப்பாளர் ஜொள்ளகவுண்டனூர் பள்ளி மு.சிவக்குமார்,ப.ஆ, வரவேற்புரை வழங்கினார் மற்றும் இவ்விழா நிகழ்சியை லாலாபேட்டை பள்ளி கே.இரகு,ப.ஆ தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு.தாமோதரன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன் மற்றும் திரு.உதயசங்கர்,ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.சத்தியசுந்திரம், மிட்டூர், ஆண்டியப்பனூர் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக சீரங்கப்பட்டி பள்ளி எம்.கிருஷ்ணன்,ப.ஆ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் மற்றும் வாழ்வின் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் விளக்கி எதிர்கால தேர்வுகள், முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இனிதே NMMS பயிற்சி துவக்க விழா நிறைவு பெற்று பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்க தொடங்கினர்.

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
NMMS குழு திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்.



Saturday 12 October 2019

திருப்பத்தூர் ஒன்றியம், நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இரு மையங்களில் இனிதே தொடங்கப்பட்டது 🙏




*தேசிய திறனாய்வு தேர்வு NMMS செய்தி*திருப்பத்தூர் ஒன்றியம்.

 நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடங்கப்பட்டது 🙏

இன்று *12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் மற்றும் திருப்பத்தூர் CKS மணி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டு மையத்தில் சிறப்பாக NMMS வகுப்புகள் இனிதே துவங்கி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மேலும் மிட்டூர் மையத்தில் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு புதூர் மரிமானிகுப்பம் அ.ஜெகதீசன்,ப.ஆ தலைமை தாங்கினார், மைய ஒருங்கிணைப்பாளர்களில் ஜொள்ளகவுண்டனூர் பள்ளி மு.சிவக்குமார்,ப.ஆ, வரவேற்புரை வழங்கினார் மற்றும் இவ்விழா நிகழ்சியை லாலாபேட்டை பள்ளி கே.இரகு,ப.ஆ தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு.தாமோதரன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன் மற்றும் திரு.உதயசங்கர்,ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.சத்தியசுந்திரம், மிட்டூர், ஆண்டியப்பனூர் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக சீரங்கப்பட்டி பள்ளி எம்.கிருஷ்ணன்,ப.ஆ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் மற்றும் வாழ்வின் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் விளக்கி எதிர்கால தேர்வுகள், முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இனிதே NMMS பயிற்சி துவக்க விழா நிறைவு பெற்று பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்க தொடங்கினர்.

இங்கனம்
மிட்டூர் மற்றும் திருப்பத்தூர்
ஒருங்கிணைப்பாளர்கள்

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
NMMS குழு திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்.