Powered By Blogger

Sunday 29 September 2019

பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்!!* மற்றும் காணொலி

பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்!!*

Click Here
https://drive.google.com/file/d/1B5kzh15t3h925dfGigrjnK0n-6Ha995h/view?usp=drivesdk


*பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள் எனும் இக்காணொலி அக்டோபர் 2019 இல் நடைபெற இருக்கும் பள்ளிப் பார்வைக்குத் தேவையான பதிவேடுகள் மற்றும் செயற்களங்கள் தொடர்பாகப் பேசுகிறது. ஆசிரியர்களுக்குப் பயனுள்ள காணொலி!!*

Click Here
https://www.youtube.com/watch?v=_naWbl4CL2E

Siva tams Ldr tpt

Saturday 28 September 2019

ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% லிருந்து 5% விதமாக குறைப்பு ஜனவரி 2019 முதல் பிடித்தம் கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கை.


ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% பிடித்தம் செய்து கொண்டிருந்ததை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜனவரி 2019 முதல்(4-1-19) ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு செலுத்தும் பங்கு தொகையில் 5% பிடித்தம் செய்ய வேண்டும் என்பதற்கான ஆணை Jan2019 ல் வெளியிடப்பட்ட நிலையில், சில ஒன்றியங்களை என்னும் செயல்படாத நிலையில் உள்ளது.எனவே அனைத்து ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆசிரியர்களுக்கு  ஜனவரி 2019 முதல் ஐந்து சதவீதம் பிடித்தம் செய்ய நடவடிக்கையை ஆசிரியர்களின் கூட்டுறவு சொசைட்டி நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கூட்டுறவு சங்க பதிவாளர்சுற்றறிக்கை.
https://drive.google.com/file/d/1uf7tE_MYcsB2EVEpsx3VXdcjc45KzBKw/view?usp=drivesdk

என்றும் ஆசிரியர் நலனில்

*மு.சிவகுமார் தலைவர்* தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர் வட்டாரம்

Wednesday 25 September 2019

Tams ன் வருமானவரி தகவல்*சரியான சாப்ட்வேரில் TDS மற்றும் ஈ-பைலிங் செய்தால் சரியாக இருக்கும்.

*Tams ன் வருமானவரி தகவல்*



*INCOME Tax form 16 சார்பில் ஆசிரியருக்கு ஒரு தகவல் தற்போது சிலரால்  பயன்படுத்தி வரும் இன்கம்டாக்ஸ் சாப்ட்வேர் XL  SOFTWARE பல வடிவங்களில் பல விதங்களிலும் பலரால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.*
*வழங்கப்பட்டுள்ள எக்ஸெல் சாப்ட்வேரில் (xl software)  படிவம் 16 (Form 16) சில சாப்ட்வேர்களில் வழங்கப்பட்டுள்ளது இந்த சாப்ட்வேரை  பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது*

 *ஏனெனில் படிவம்16  (form 16)இதிலிருந்து பிரதி எடுக்கப்பட்டு*
*income tax returns ஆசிரியர்களால் வருகிற  ஜூன் மாதம் முதல் நிரப்பப்படும் அப்படி நிறப்படுவதால் ஆசிரியருக்கு (இன்கம் டாக்ஸ் துறையில்) Income tax department இருந்து நோட்டீஸ் (Notice)* *தண்டத்தொகை additional payment விதிக்க வாய்ப்புள்ளது எனவே இந்த (XL software) சாப்ட்வேர்கள் வருகின்ற படிவம் 16 (Form 16) பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

*படிவம் 16சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் டிடிஎஸ் (TDS)செய்து அதன் மூலம் வருகின்ற உண்மையான படிவம் 16 சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு May 31 வழங்க வேண்டும்அப்படி வழங்கப்படுகின்ற படிவம் 16 (form16) பயன்படுத்தி தாங்கள் income tax returns (ITR) பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே தங்களுக்கு இன்கம்டாக்ஸ் துறையால் வழங்கப்படுகின்ற நோட்டீஸ் ஆனது வராது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*உண்மையான படிவம் 16 க்கும் தற்போது வரை சாப்ட்வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன.

போலி படிவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்*

*1.உண்மையான படிவம் அரசு துறை அடையாளம் சிங்கமுகம்  பயன்படுத்தப்படுகிறது*
போலியானதில் இல்லை

*2. டி டி எஸ் TDS சர்டிஃபிகேட் CERTIFICATE நம்பர்   உள்ளது*
போலியானதில் இல்லை

*3. டிடிஎஸ் TDS இல் தங்களால் செலுத்தப்பட்ட இன்கம்டேக்ஸ் தொகை அனுமதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது*
போலியான இல்லை

*4. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் ஆல் தங்களுக்கு வழங்கப்பட்ட வருட தொகை (total income )என்ன என்பது உண்மையான படிவம் 16ல் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்*
போலியானவைகளில் இல்லை

படிவம் 16 சம்பந்தப்பட்ட சம்பளம் பட்டுவாடா அதிகாரி வழங்கப்பட வேண்டும் காலஆண்டு வாரியாக பதிவு செய்து மே மாத இறுதியில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

*பள்ளிகளை பொறுத்தவரை யார் யார் சம்பள பட்டுவாடா அதிகாரி என்று பார்ப்போம்*

*அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள்-*
block level officer(BEO)

*அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்-* HEADMASTERS

*அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்-* DISTRICT EDUCATION OFFICERS

பிற அரசு துறைஅலுவலகங்கள்-
DDOS (BILL SIGNING OFFICERS)

*எனவே போலியாக இருக்கக்கூடிய ஆப்ஷனை பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. உண்மையான படிவம் 16-ஐ பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியவருகிறது.*

என்றும் ஆசிரியர் நலனுடன்

*மு.சிவக்குமார், தலைவர்*
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
திருப்பத்தூர் வட்டம்.
வேலூர் மாவட்டம்.

Tuesday 24 September 2019

ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?*

*ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?*


ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? Income Tax Return (ITR) e-filing Online : இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், இன்கம் டேக்ஸ் ரிட்டனை உடனடியாக விண்ணப்பிக்கலாம். Income Tax Return (ITR) e-filing Online: எப்போதுமே ஃபார்ம் 16 மூலமாகத் தான் வருமான வரி தாக்கல் செய்வோம். ஆனால் நம் நிறுவனங்களில் அந்த படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, அனுப்புவது என்பது பெரும் தலைவலி தான். இனி அந்த கவலை இல்லை. இணையத்தின் மூலம் உங்களின் தகவல்களை பூர்த்தி நீங்கள் நேரடியாக வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம். உங்களின் ஃபார்ம் 16 என்பது உங்களின் வருமானம், வரி, மற்றும் டி.டி.எஸ் என்னென்ன என்பதை திட்டவட்டமாக விளக்கும் ஒரு சான்றாகும். payslips உங்களின் பே ஸ்லிப்பினை (payslips) வைத்து நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்று கணித்துக் கொள்ள இயலும். ஒரு நிதி ஆண்டில் நீங்கள் பெற்ற 12 மாதத்திற்கான பே ஸ்லிப்பினையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நெட் சேலரியையும் கணக்கில் கொள்ளுங்கள். 26-AS 26-AS ஃபார்மில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களின் டி.டி.எஸ் மதிப்பினையும், உங்களின் பே ஸ்லிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் டி.டி.எஸ் மதிப்பினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதனை உங்கள் நிறுவனத்திடம் கேட்டு க்ளாரிஃபை செய்து கொள்ளவும். வீட்டு வாடகை ஃபில் House Rent Allowance எனப்படும் வீட்டு வாடகைக்கான தொகை உங்களின் சம்பள பணத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பணத்தினை குறைக்க உங்களின் வீட்டு வாடகை ஃபில்களை முன்பே உங்களின் நிறுவனங்களிடம் சமர்பித்துவிடுங்கள். காப்பீடுகள் நீங்கள் மாதாமாதம் உங்கள் பெயரில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் போட்டு வைத்திருக்கும் காப்பீடுகளுக்கு பணம் செலுத்துவீர்கள். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவைகளை கட்டுவதற்கான ரசீதுகள் மற்றும் பி.எஃப்., பி.பி.எஃப் போன்ற சேமிப்புத்திட்ட விவரங்களை சமர்பித்தால் மேலும் நீங்கள் கட்ட வேண்டிய வரியின் விகிதம் குறைக்கப்படும். இதர வருமானம் வாடகைக்கு வீடு தருதல், ஃபிக்சட் டெபாசிட் மூலம் பெரும் பணம் ஆகியவற்றையும் மறக்காமல் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 26AS ஃபார்மில் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவில் நீங்கள் வருமான வரி செலுத்தி இருணந்தால் காலம் தாழ்த்தாமல் மீதத் தொகையும் கட்டிவிடுங்கள் இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், உங்களின் இன்கம் டேக்ஸ் ரிட்டனை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம்.

Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection

Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection



*🙏 வணக்கம் நண்பர்களே*
*Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection புதிய பாடத்திட்ட மற்றும் பழைய பாடத்திட்ட study materials zeal study team தயார் செய்து upload செய்துள்ளோம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்*
*Nmms தேர்வு  அறிவிப்பு வெளி வந்து உள்ளது*
தேர்வுக்கு  தயார் செய்ய வேண்டியவை

*மனத்திறன் தேர்வு MAT*
*பாடத்திறன் தேர்வுக்குSAT*

NMMS 2019: Application, Date, Eligibility Pattern, Syllabus*

*NMMS 2019: Application, Date, Eligibility Pattern, Syllabus*

The NMMS is commonly known as National Means Cum Merit Scholarship. The National Means Cum Merit Scholarship is an exam which is also known as NMMS Exam 2019. The Central Government is the official organizing body to conduct the National Means Cum Merit Scholarship exam every year for the eligible applicants.

However, the exam is managed by the local educational authorities to award 1,00,000 scholarships to the eligible applicants from class IX to class XII. However, only those applicants will be eligible to get the scholarship from the authority whose parents income is not more than Rs 1,50,000 per annum from all sources.

The National Means Cum Merit Scholarship is conducted in each state and union territories. However, the National Means Cum Merit Scholarship will be organized in two stages only. The first stage of the exam will be conducted by the respective state authorities.

And applicants who have cleared the first stage will be eligible to appear for the second stage conducted by the NCERT. Applicants will get all the notification and information about the entrance exam on the official website of the university itself.

NMMS 2019 Exam Dates

The important information related to the important events and tentative dates is mentioned below for the reference of the applicants:

Important events Tentative dates
Date of entrance exam In the month of December 2019. Notification will be come month of September.

NMMS 2019 Application Form

The important information related to the application form is mentioned below for the reference of the applicants:

In online mode applicants have to fill the application form in order to appear for the exam.
Applicants need to register themselves in order to get the application form.
After that applicants need to start filing the application form.
At the time of filing the application form, applicants need to enter all necessary details in the application form as needed.
All the details should be filed properly in the application form.
After that applicants need to take a printout of the duly filled application form.
Once the printout of the application form is taken applicants need to pay the application fee as mention on the official website and submit the application form before the due
NOTE: The details of the application fee will be available on the official website of the university.

NMMS 2019 Eligibility Criteria

The important information related to the eligibility criteria is mentioned below for the reference of the applicants:

Educational qualification:
Applicants who are studying in class IX in any government, local body and government-aided schools are eligible to appear.
Income of parents:
Parents of the applicants whose income is not more than Rs 1,50,000 per annum from all sources are only eligible to apply for the exam.
Qualifying marks:
One must have scored more than 55% marks in the class VIII if they belong to the general
One must have scored not less than 50% marks in the class VIII if they belong to reserved category.

*NMMS 2019 Paper Pattern*

The important information related to the paper pattern is mentioned below for the reference of the applicants:

The entrance exam will be conducted in offline mode in two parts as mention below:

MAT – Mental Ability Test
SAT – Scholastic Aptitude Test

90 minutes duration will be allotted to the applicants to solve the paper.

The question paper of the exam will contain 90 questions of 90 marks only.

We have mentioned below all the information about the paper pattern in short:

Papers Test No of questions No of marks Duration of the exam

Paper I MAT – Mental Ability Test

*90 questions 90 marks 90 minutes*

Paper II SAT – Scholastic Aptitude Test

*90 questions 90 marks 90 minutes*

NMMS 2019 Syllabus

The important information related to the important topics and chapters for the preparation of the entrance exam is mentioned below for the reference of the applicants:

Mental Ability Test:
Analogy
Classification
Numerical series
Pattern perception
Hidden figures
Scholastic Aptitude Test:
Physics
Chemistry
Biology
Social studies
Mathematics

By Siva tams Ldr tpt blk.

தேசிய திறனாய்வு தேர்வு (NMMS)..Notification 2019-20

தேசிய திறனாய்வு தேர்வு NMMS Notification 2019-20.


NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) 👆🏼Dec 2019
Notification

Click Here
https://drive.google.com/file/d/1JSOMaaz72-c8E7bHtFuPsHHH_-eboHD2/view?usp=drivesdk.

OR
https://drive.google.com/file/d/1JSOMaaz72-c8E7bHtFuPsHHH_-eboHD2/view?usp=drivesdk

ONLINE ENTRY PORTAL

Click Here
http://218.248.44.57/online/

Siva tams Ldr tpt blk.

BIO METRIC MOBILE APP.. FOR GOT EMPLOYEES

Are you a government employee? Check your attendance on AEBAS andq manage your leaves and tours etc. Just download this application:

Biometric mobile app
Click Here
https://play.google.com/store/apps/details?id=com.attendance.aebas

Siva tams Ldr tpt

பொதுவான பார்வையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் *உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*

உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*


 என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*

பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...

உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...

பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.

இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.

இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.

சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.

தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.

பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !

இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும்.  இது இடத்திற்கு இடம் மாறுபடும்.
அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.

வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.
சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.

இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.

காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !

நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும்  போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.

சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.

மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!
இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி,  ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.

இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.

''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !

வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.
மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.

இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...

பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !

This article was,written by Mr. Arunmanohar, vellore.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva tams Ldr tpt blk.

பயோமெட்ரிக் ATTENDENCE ல் ஆசிரியர்கள் எவ்வாறு Login மற்றும் Password உருவாக்குவது, விடுமுறை எவ்வாறு Apply செய்வது எவ்வாறு?

BIO METRIC ATTENDANCE ல் ஆசிரியர்கள் INDIVIDUAL LOGIN & PASSWORD உருவாக்குவது எவ்வாறு LEAVE APLY VEDIO

https://youtu.be/ea1dQPwSAm4

Siva tams Ldr tpt

HOW TO REGISTER TEACHERS DETAILS IN BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN SCHOOL EDUCATION DEPATMENT

HOW TO REGISTER TEACHERS DETAILS IN BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN SCHOOL EDUCATION DEPATMENT STEP BY STEP VIDEO LINK

Click Here

https://youtu.be/EMlUjVZkOrw

By Siva tams Ldr tpt

TRB தேர்வு வாரியம் தேர்வர்களின் அருகில் மையம் இருந்தும் தேர்வுமையம் ஒதுக்காது ஏன் என்று தேர்வர்களின் குமுறல் கவனிக்குமா TRB தேர்வு வாரியம்??

*PG trb தமிழ் தேர்வு 29/09/2019 ஞாயிறு காலை 9 மணிக்கு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளேன். திருவள்ளூர்மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் சொரக்காயப்பேட்டை கிராமத்தில் என் வீடு அமைந்துள்ளது. என் அமைந்துள்ள இடத்திலிருந்து தேர்வுவமையமான கும்மிடிப்பூண்டிக்குச்செல்லவேண்டும்.*

*வீட்டிலிருந்து (10 நிமிட பயணத்தில்)5 கி.மீ. தூரத்தில் பொதட்டூர்பேட்டையில் 2 தேர்வு மையங்களும்*

*15 கி.மீ. தூரத்தில் R.K.பேட்டையில் ஒரு தேர்வு மையமும்*

*30 கி.மீ. தூரத்தில் திருத்தணியில் 2 தேர்வு மையங்களும்*

*65 கி.மீ.தூரத்தில் திருவள்ளூரில் 2 தேர்வு மையங்களும் மணவாளநகரில் 1 தேர்வு மையமும் உள்ளன*

*70 கி.மீ. தூரத்தில் ஆவடியில் 2 தேர்வு மையங்களும் 75 கி.மீ தூரத்தில் அம்பத்தூரில் 2 தேர்வு மையங்களும் உள்ளன* *ஆனால் 170 கி.மீ. தூரத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் அமைந்துள்ளதால் தேர்வு எழுதச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது*



*சொரக்காயப்பேட்டையிலிருந்து (பேருந்து)திருத்தணி செல்ல ஒன்னேகால் மணி நேரமும் திருத்தணியிலிருந்து சென்னை (ரயில்) செல்ல மூன்று மணி நேரமும் சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்ல ஒன்னரை மணி நேரமும் அங்கிருந்து தேர்வு மையம் தேடிச்செல்ல அரை மணி நேரமும் ஆகும்*

*ஆக வீட்டிலிருந்து தேர்வு மையம் செல்ல ஆறேகால் மணி நேரம் ஆகும் தேர்வு மையத்துக்கு 7:30 மணிக்குள் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு ஒரு மணிக்கு புறப்பட்டால் மட்டுமே காலை 7:30 மணிக்கு தேர்வு மையம் செல்ல முடியும். ஆனால் அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடையாது.முந்திய நாள் இரவு 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் மட்டுமே 9:30 மணிக்கு ரயிலில் ஏறி 12:30 க்கு சென்னையைஅடைந்து ஸ்டேஷனிலேயே அதிகாலை வரை அமர்ந்து 5 மணிக்கு புறப்பட்டு தேர்வு மையம் செல்ல முடியும் இவ்வளவு சிரமப்பட்டு தூக்கம் கெட்டு தேர்வு மையம் சென்று சிறப்பாக தேர்வெழுதமுடியுமா*

*வீட்டிற்கு அருகில் பொதட்டூர் R.K.பேட்டை திருத்தணி திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் என அருகருகே 12 மையங்கள் இருக்கும்போது நீண்டதூரம் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்*

*இரு சக்கரவாகனத்தில் 10 நிமிடத்தில் பொதட்டூர் தேர்வு மையத்துக்கும் 30 நிமிடத்தில் R.K.பேட்டைத் தேர்வு மையத்துக்கும் 45 நிமிடங்களில் திருத்தணிக்கும் ஒன்னரை மணி நேரத்தில் திருவள்ளூருக்கும் சென்று தேர்வெழுத வாய்ப்பிருக்கும்போது நான் ஏன் 12 மணிநேரம் கஷ்டப்பட்டு தேர்வெழுதவேண்டும்*



*இதை மனுவாக தயாரித்து இன்று திருவள்ளூர்  கலக்டரிடம் வழங்கி கோரிக்கை வைக்கப்போகிறேன்*



Siva tams Ldr tpt

Sunday 22 September 2019

Biometric Attendance System BAS Installation Method

BIOMETRIC ATTENDANCE SYSTEM BAS  -INSTALLATION OF RD SERVICE ENABLE SETUP FOR WINDOWS DESKTOP DEVICE.





Download here – Full file…
https://drive.google.com/file/d/1KKl3M9U68ebP-RYSoKz4EcmUGIhCiADE/view?usp=drivesdk.

By Siva tams Ldr tpt


BIO-METRIC APP INSTALLED ®ISTRATION, DEVICE ACTIVATION, TRS INDIVIDUAL LOGIN, LEAVE APPLY ETC.

நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு -பயோமெட்ரிக் இன்ஸ்டாலேஷன் மற்றும் ஆக்டிவேஷன் பற்றி ஆசிரியர்களுக்காக எளிமையாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது

HOW TO USER REGISTRATION- BIO METRIC ONLINE PART 1

Click Here
https://youtu.be/lmyIYIaYXm8

BIO METRIC PART 2, AADHAR VERIFIED, DEVICE LOCATION, ADMIN, NODEL ADMIN Details

Click Here
https://youtu.be/a30GKm235GQ

BIO METRIC PART-3, SOFTWARE INSTALLATION

Click Here
https://youtu.be/hOXhXe9AJ9M

BIO METRIC- INDIVIDUAL EMPLOYEE LOGIN DETAILS.
Click Here
https://youtu.be/tmAwBwaXStY


 BIO METRIC ஆசிரியர்களின் விடுமுறையை எவ்வாறு பதிவிடுவது ?*

Click Here
https://youtu.be/jgrI05e0G-E 

Thanks to Mr.Thenarasu, Tiruvallur Dt.

By Siva tams ldr tpt
www.alltrstnsiva.blogspot.com

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் ..தீர்வு ஏற்படுமா??..

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் ....
2016,2017,2018 ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களனது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

THERE IS NO SCHEME AVAILABLE

என்றே வருகிறது விண்ணப்பத்தினை SUBMIT செய்ய முடியவில்லை.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே பிரச்சினை

கண்டுகொள்ளுமா??? பள்ளிக் கல்வித் துறை


*🛑NMMS -🛑 ஊக்கத்தொகை National Scholarship Portal மூலம் விண்ணப்பதில் உள்ள சில  பிரச்சனைகள், தீர்வுகள், தீர்க்க முடியாத தொழில்நுட்ப பிரச்சனைகள்.....*


*👉சில தெளிவுகள்:*
1. National Scholaship Portal (NSP) மூலம் ஒரு மாணவர் ஒரு திட்டத்தின் ஊக்கத்தொகை மட்டுமே பெற முடியும்.

2. இது மத்திய அரசால் மாணவர்களுக்கு நேரடியாக பண பலன் கிடைக்க நிர்வகிக்கப்படும் வலைதளம். தொடக்ககல்வி முதல் கல்லூரி வரை உள்ள அனைத்து ஊக்கத்தொகை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே வலைத்தளம்...

3. ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு பண பலன் பெற்று வழங்க வேண்டும்.

4.இந்த portal மூலம் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் கீழ் சிறுபான்மை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திட்ட உதவி தொகை விண்ணப்பித்து பெற்று நேரடியாக மாணவனின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.

5. ஏற்கனவே தொடக்ககல்வி முதல் தான் சிறுபான்மை வகுப்பினை சார்ந்ததின் காரணமாக NSP மூலம்
( Minority Scholarship)( வருடத்திற்கு 1000 ரூ) திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் ஒரு மாணவன் தன்னுடைய பழைய விண்ணப்பத்தை நீக்கி விட்டு அதனை விட பண பலன் அதிகம் உள்ள NMMS தேர்ச்சிக்கான (வருடத்திற்கு 12000) விண்ணப்பித்து பணம் பெற்று கொள்ளலாம்.. (ஆனால் முடியவில்லை)

6. இது மாணவனின் ஆதார் அட்டை  வங்கிகணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைந்த ஒரு விண்ணப்ப முறை..

7. NMMS தேர்வில் 2017- 18 க்கு முன்னால் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 தொகையும் அதற்கு பின்னால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12000 தொகையும் 4 வருடங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

8. Fresh registration செய்தவர்கள் ஓவ்வொரு வருடமும் renewal செய்ய வேணடும்.

*👉NMMS பணம் கிடைக்காமல் போக காரணம்..*

1. ஒவ்வொரு வருடமும் 8 ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அதே பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்றால் எளிதாக மாணவனை அடையாளம் கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.

2. ஆனால் 8 ம் வகுப்பு நடுநிலை பள்ளியில் பயின்று வேறு பள்ளியில் போய் சேரும் மாணவன் NMMS தேர்ச்சி பெற்று இருப்பதை அந்த புதிய பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்யாமல் இருப்பதன் மூலம் விண்ணப்பித்து பெறுவதில் சிக்கல் உள்ளது..

3. பல மாணவர்களுக்கு தான் NMMS தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பதே தெரியாமல் உள்ளது. இது புதிய பள்ளி மாறுவதில் உள்ள பிரச்சினை..

4. .மேலும் 11 மற்றும் 12 படிப்புக்கு வேறு பள்ளிக்கு செல்லும் போது ஏறத்தாழ முற்றிலுமாக மாணவனுடைய renewal விடுபட்டு போகிறது..

5. முனைப்புள்ள ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருந்து renewal மற்றும் fresh application செய்து வருகிறார்கள்..

6. வங்கி கணக்கு எண் தவறு மற்றும் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளதும் ஒரு காரணம்.

*தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்ச்னைகள்:*

1. சிறுபான்மை மாணவர்கள் NMMS தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு Minority Scholarship திட்டம் மட்டுமே NSP ல் விண்ணப்பிக்க முடிகிறது.. 2015-16 முதல் ஏராளமான மாணாக்கர்கள் online ல் விண்ணப்பிக்க இயலாமல் உள்ளனர்...

2. 2015- 2016 முதல் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு offline வழியில் விண்ணப்பித்தாக கூறி சில மாணவர்களுக்கு மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது... சில மாணவர்களுக்கு அதுவும் இல்லை.. தொழில் நுட்ப காரணங்களால் விண்ணப்பித்து பணம் பெறாத மாணவர்களுக்கு பணம் கிடைக்குமா? இன்று வரை அவர்களால் விண்ணப்பிக்க இயலவில்லை...

3. மாணவனின் பெயர் ஆதார் படி NMMS தேர்ச்சி அறிக்கையில் இருந்தால் ஆதார் மூலம் NSP ல் NMMs  விண்ணப்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை...

4. பெயர் மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்க இயலவில்லை... There is no scheme to apply for the information provided  என்று வருகிறது..

5. இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், renewal விடுப்பட்ட மாணவர்கள் ,fresh post metric NMMS விண்ணப்பிக்க இயலவில்லை..

6. இந்த பிரச்சினை தீர்க்க இயக்குநர் அய்யா  சுற்றறிக்கை அனுப்பிய குறிப்புகளில் ஆதார் மூலம் விண்ணப்பிக்க இயலவில்லை எனில் விண்ணப்பத்தை நீக்கி விட்டு மீண்டும் விண்ணப்பிக்கவும் என்று கூறியுள்ளார்.. மீண்டும் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறவில்லை.. குறிப்புக்கள் பின்பற்றினால் விண்ணப்பதில் எந்த பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் விண்ணப்பிக்க இயலவில்லை...

7. ஆகவே அனைத்து மாணவர்களும் NMMS விண்ணப்பிக்க, விடுப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க, சிறுபான்மை மாணவர்கள் minority விடுத்து NMMS, விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலையில் அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க ஆவணம் செய்யுமாறு சங்க நிர்வாகிகளை  பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

8. தயவு செய்து இந்த பிரச்சனை மேல் கவனம் கொள்ள நடவடிக்கை எடுக்கவும்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்கள்,  விண்ணப்பிக்க ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்... நன்றி.

நன்றி.
மோ.பிரபாகரன்,ப.ஆ. கொரடாச்சேரி. திருவாரூர்

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ.
திருப்பத்தூர் வேலூர்.

Wednesday 18 September 2019

Teacher Attendance biometric Installed vedios..

ஆசிரியர்களின் விவரங்களை BIO METRIC வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ

VEDIO 1
https://www.youtube.com/watch?v=lmyIYIaYXm8

VEDIO 2
https://www.youtube.com/watch?v=a30GKm235GQ

VEDIO 3
https://www.youtube.com/watch?v=hOXhXe9AJ9M

THANKSENARASU.
SIVA TAMS LDR TPT.

Tuesday 17 September 2019

biometric Teachers attendance registration method

ஆசிரியர்கள் BIO METRIC பதிவு எவ்வாறு செய்வது கணினியில் என்பதை விளக்கும் வழிமுறை...சிவா,திருப்பத்தூர்

Bio metric trs registration method

step 1
tndeotirupatturvel.attendance. gov.in

Or Click Here
https://tndeotirupatturvel.attendance.gov.in/

Left side you see

 

Click....User Registration
User name.........ஆதார் கார்டில் உள்ளவாறு உங்கள் பெயர்
Date of Birth......01-09-1970
Gender.......ஆண்
Enter Adhar no........1232 1321 3434
Email.........siva@gmail.com
Mobile no.......9894429770
Click Next


Show next window



Step 2

Organization name....(default DEO tpt)
User type......government
Division/Unit with Organization...
Designation.....deo-tirupattur
District....vellore
Office location.....pums jg schl
Organization user code....cps123213
Photograph..chose file
(Photo rezie below 150kb)
Enter the code exactly...eDr5re(show there)
Disclaimer...tick
Click ..Submit

Open new window show..



Registration completed successfully



Each and every teachers same above method in ur schl.



Siva tams Ldr Tpt.

Sunday 15 September 2019

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை

*💥💥பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்*

*💥💥சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 14 அறிவுறுத்தல்கள்*

*💥💥தற்போது பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால் அரசு மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகள் பற்றிய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன*

*💥💥1.மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல், குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்*

*💥💥2. வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்*

*💥💥3.வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப் படவேண்டும். இதன்மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்*

*💥💥4. நல்ல நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசுக்கள் உருவாகிறது என்றும், அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால்தான் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது என்ற விழிப்புணர்வினையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்*

*💥💥5. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்*

*💥💥6. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக நியமித்து பள்ளியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மற்றும் அவருடைய பெற்றோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்*

*💥💥7. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பள்ளி மற்றும் வீடுகளில் வீணாகத் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்*

*💥💥8. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப்போதும் சுகாதாரமான குடிநீரை மாணவர்கள் உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும்*

*💥💥9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்*

*💥💥10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும் தொற்று நோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்*

*💥💥11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள மாணவர்களை அறிவுறுத்துமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் வேண்டும்*

*💥💥12. பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டது என்றாலும் அதை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, பாதுகாவலருக்கோ தெரிவித்து பின்பு மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்*

*💥💥13. சுகாதாரம் மற்றும் தூய்மை முக்கியத்துவத்தின் அறிவுரைகளால் மாணவர்களிடம் காணப்படும் மாற்றம் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்*

*💥💥14. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*

*💥💥இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

Saturday 14 September 2019

அரசு ஊழியரின் பரிதாப நிலைமையை எதிர்காலத்தில் பாருங்க. படியுங்க. புரியும்



*அரசு ஊழியரின் பரிதாப நிலைமையை எதிர்காலத்தில் பாருங்க.    படியுங்க.  புரியும்*

புதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?

1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல்லை என்றும், அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

 *
 *புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன?*
*
ஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

   இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA)  இல் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.

PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக  (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எந்த உரிமையும் கோர முடியாது. (கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)

   அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement – இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.

     சரி, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?   அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள்.

 அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு  10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது. பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது. இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.


    சரி, ஓய்வு பெறும் முன்பே, விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு  என்ன கிடைக்கும்?


   அவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.


   சரி, பங்குச் சந்தையில் நட்டம் ஏற்பட்டால் யார் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வது?

   நம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.

   சரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
பொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.
 இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824.

   நான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கணக்கில் இருக்கும்

 உத்தேசமான தொகை: ரூ.10,40,000
நான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.

   அதன்பிறகு என் கணக்கில் இருக்கும் 40 % தொகை: = ரூ.4,16,000.
இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய  40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.
     என்னுடைய 40 % தொகை      = ரூ.4,16,000
இதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு= ரூ. 41,600

மாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466

ஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.

2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக இருக்கும்.

 2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும்.
அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

1.    இந்த நான்காயிரம் ரூபாயில் 2030ஆண்டு ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?

2.  நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு 2023 ஆண்டு வீடு வாங்க முடியுமா? இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே?

      CPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே?  என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே?

    இவ்வளவுதான் பாதிப்பா? இதையும் பாருங்கள்:

இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824.
இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.
     என்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம்.
இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும்என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி.

 நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000.
தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக்கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.

   வட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.

    நாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.
   
     இதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்றுவேலை, வங்கி முதலாளிகளைச் செழிக்க வைக்க நம்மையெல்லாம் பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறோம்.

   புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்களும், அரசு ஊழியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளும் இதைச் சிந்திக்க வேண்டும்.

NMMS கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் online ல் பதிவு செய்ய உத்தரவு-இயக்குநர்



பள்ளி கல்வி - திட்ட ஆண்டு 2019-20 - மத்திய அரசின் உதவித்தொகைதிட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-MeritScholarship Scheme) தேர்ச்சி பெற்றமாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் 30.09.2019 க்குள் பதிவேற்றம் செய்தல்அறிவுரை வழங்குதல் சார்பு!!

Friday 13 September 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!


மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம்மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும்.இதற்காக மாநில அளவில் 6 பேர் கொண்ட கருத்தாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.




இதில் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு செப்.16 முதல் 21-ம் தேதி வரையும், மதுரை உட்பட இதர 16 மாவட்டங்களுக்கு 23 முதல் 28-ம் தேதி வரையும் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் அக்டோபர் மாதம் மாநில கருத்தாளர்கள் மூலம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.

Siva tams Ldr Tpt

SBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு



இதன்படி, வங்கிக் கணக்கில் இருப்பு வைத்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறுவகைகளில் சர்வீஸ் கட்டணம் மாறப்போகிறது.
1. நகர்புறங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் வங்கிக்கணக்கில் மாதம் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம வைத்திருக்க வேண்டும் என்று நிலை இருந்தது. அது ரூ.3 ஆயிரமாகக் குறைப்படுகிறது. ஒருவேளை அந்த ரூ.3ஆயிரம் ரூபாயையும் குறைந்தபட்ச இருப்பாக பராமரிக்க இயலாமல், ரூ.1500 மட்டும் வைத்திருந்தால் ரூ.10 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீத குறைந்தபட்ச இருப்பும் இல்லாவிட்டால் ரூ.15 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.




2. சிறிய நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் கணக்கு வைத்து இருப்போர் மாதம் குறைந்த பட்ச இருப்பாக ரூ.2 ஆயிரமும், கிராமப்புறங்களில் ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.





சிறிய நகரங்களில் வசிப்போர் தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதம் மட்டுமே வைத்திருந்தால் ரூ.7.50 ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதம் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காமல் இருந்தால், ரூ.10 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீதத்துக்கு அதிகமானால் ரூ.12 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.





3. கிராமப்புறங்களில் உள்ள வங்கியில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதத்துக்கும் குறைந்தால் ரூ.5 அபராதமும் ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதமாகக்குறைந்தால் ரூ.7.50 அபராதமும், 75 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் ரூ.10 அபராதமும் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்
4. என்இஎப்டி(நெப்ட்) மூலம் பணம் அனுப்பும் கட்டணம் மாற்றப்படுகிறது. ரூ.10 ஆயிரம் வரை பணம் NEFT முறையில் அனுப்பினால் 2 ரூபாயும் ஜிஎஸ்டி வரியும், ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் செய்தால் ரூ.20, ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.




5. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.20கட்டணம் ஜிஎஸ்டியும், ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.40 கட்டணம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.
6. ஒருவர் தன்னுடைய சேமிப்பு கணக்கில் இருந்து மாதத்துக்கு 3 முறை டெபாசிட், பணம் எடுத்தலுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் செய்யப்படும் பரிமாற்றத்துக்கு ரூ.50 கட்டணம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.




7. ஒருவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கி தவிர்த்து வேறு கிளையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
Siva tams Ldr Tpt

Thursday 12 September 2019

முறைகேடுகளை தடுக்க ஆதாரில் முகப்பதிவு அடையாளம் இனி... கட்டாயம்! செப்., 15ல் இருந்து அமல்!

ஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது.

 இது, செப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. 'இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறுவது, தண்டனைக்குரிய குற்றம்' என, அரசு அறிவித்துள்ளது.யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை ஆணையம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கங்கள் உடைய, 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கி வருகிறது.

குற்றச்சாட்டுகள்

வங்கி கணக்குகள், பான் அட்டை, ஓய்வூதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், மொபைல் போன் சேவைகள், சமையல் காஸ் மானியம் உட்பட, பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த சேவைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட ஆதார் அட்டையின் உண்மை தன்மையை அறிய, அட்டை வைத்திருப்பவரின் விரல் ரேகை அல்லது கண்ணின் கருவிழிப் படலம் பரிசோதிக்கப்படுகிறது.இதில் உள்ள பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆதார் அட்டை பயனாளரின் முகத்தை, புகைப்படம் மூலம் பதிவு செய்து சரி பார்க்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை பயன்படுத்தும்போது, ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகையுடன் அவர்களது விரல் ரேகை, ஒத்துப்போவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.வயோதிகம் காரணமாகவும், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரின் கைரேகைகளில் மாற்றம் ஏற்படுவதன் மூலமும், இந்த தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.இது போன்ற நேரங்களில், சம்பந்தப்பட்டோர் முகப்பதிவு அடையாளத்தை சரி பார்ப்பதன் மூலம், தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும்.

உத்தரவு

இந்த முகப்பதிவு அடையாளத்தை, முதல்கட்டமாக, மொபைல் போன், 'சிம்' கார்டுகள் வாங்குவோரிடம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும், செப்., 15 முதல், புதிய சிம் கார்டுகள் வாங்க வருவோரிடம், கை ரேகை, கரு விழிப்படலம் பதிவு செய்யப்படுவதோடு, அவரது முகமும் பதிவு செய்து கொள்ளப்படும். பின், மூன்று தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, சிம் கார்டுகள் வழங்கப்படும்.ஒரு மாதத்தில் வழங்கப்படும் சிம் கார்டுகளில், குறைந்தபட்சம், 10 சதவீத சிம் கார்டுகள், முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதலில், 10 சதவீதத்தில் தொடங்கி, குறைகள் சரி செய்யப்பட்ட பின், படிப்படியாக அதிகரிக்கப்படும். பின், மற்ற சேவைகளிலும் இந்த முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு நடைமுறைபடுத்தப்படும்.இதை கடைபிடிக்க தவறுவது, தண்டனைக்குரிய குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், ஏற்கனவே ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்திடம் உள்ளது. எனவே, அவர்களின் முக அடையாளத்தை ஒப்பிட்டு சரி பார்ப்பது, சுலபமாக இருக்கும்.மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களில், புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால், சேவை நிறுவனங்களுக்கு புதிதாக உபகரணங்கள் வாங்கி தரவேண்டிய அவசியமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெங்கு பயன்படும்?

புதிய சிம் கார்டுகள் வாங்க, வங்கி, ரேஷன் கடை, அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் வருகை பதிவேடு பணிகள்* பல்வேறு சேவைகளுக்காக, ஆதார் அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், முகப்பதிவு அடையாளம் சோதிக்கப்படும்* ஆதார் அட்டை வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், பின், தாடி வளர்த்திருந்தாலோ, முடி நரைத்திருந்தாலோ, வழுக்கை விழுந்திருந்தாலோ கூட, சம்பந்தப்பட்ட நபரை, சரியாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 11 September 2019

EMIS New Update- தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தற்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் Main Subjects Taught பகுதியில் 6பாடங்களை பதிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு TIME TABLE உருவாக்குவதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. மேலும் மாற்றுப்பணியில் (deputation) உள்ள ஆசிரியர்களுக்கும் தற்போது TIME TABLE உருவாக்க முடியும்.

Siva tams Ldr Tpt

Tuesday 10 September 2019

EMIS 2019-2020- SCHOOL PROFILE AND ADDITIONAL PROFILE & TEACHER PART III UPDATE REG.

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவரம் (School Profile) மற்றும் Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile பகுதி – III) விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

September 10, 2019 by ceo
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக  உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

*மு.சிவக்குமார்,tams Ldr Tpt*

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.

 அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.

ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.

இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.

உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.

கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.
தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.

அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.

அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.

பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
Siva tams Ldr Tpt.

Sunday 8 September 2019

EMIS school additional profile details and Teacher part III filled

 https://youtu.be/Sm71nyT5G7s

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

EMIS DETAILS

📲 How to complete school additional profile details.

📲 How to complete staff profile part - III

Siva tams Ldr Tpt

Thanks to Thenarasu, RK pet.




Saturday 7 September 2019

திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது*



*24-09-2019,  உண்ணணாவிரதம்


*நெஞ்சில் கொஞ்சமும் அச்சமின்றி  24-9-19 அன்று நடைபெறும் உண்ணாாாவிரதம்  அனைவரும் கலந்து கொள்வோம். நம்முடன் களத்தில் இருந்த நண்பர்களின் 17பியை எண்ணி அணி வகுப்போம். கூடிய கூட்டம் கண்டு  உளவுத்துறை அதிகாரிகள் மேலே  அனுப்பும் செய்தியே நமக்கு நல்ல முடிவைத் தீர்மானிக்கும்.. நாம் போராடி இதுவரை தோற்றதில்லை என்பதே வரலாறு.. என்ன.. நமக்கான வெற்றி கொஞ்சம் தள்ளிப் போகிறது. அவ்வளவுதான்....*



போராட்டம் என்றால் சிறு சிறு இழப்பு இருக்கத்தான் செய்யும் இவையெல்லாம் தற்காலிகமே...

இன்று போராட வில்லை எனில் வருங்காலத்தில் நித்தம் நித்தம் வாழ்க்கை நரகமாகும் தோழர்களே...

பழைய பென்ஷன் திட்டத்தை பெற்றே தீருவோம் என சபதம் ஏற்போம் தோழர்களே..



*எந்தப் பணி இருப்பினும் அதை ஒத்தி வைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.(மீண்டும் சொல்கிறோம். நமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நம்மைக் காக்க வேண்டும், என்பதில் ஜேக்டோஜியோ உறுதியாக உள்ளது.அதனால் தான் நடக்கும்  மூன்று கட்ட நடவடிக்கைகளுக்கும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது). எனவே அச்சமின்றி திரண்டு வாருங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்..*

*அலைகடலென ஆர்பரித்து வாரீர் வாரீர் வாரீர்*



இவன்

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ*

ஒருங்கிணைப்பாளர்கள்.



(செய்தி. மு.சிவக்குமார்,Tams தலைவர்.

திருப்பத்தூர் வட்டம்.)