Powered By Blogger

Tuesday 28 February 2017

Saturday 25 February 2017

CPS NEW NUMBER FOR GOVERNMENT AND AIDED

CPS NEW NUMBER FOR GOVERNMENT AND AIDED

Click Here..VELLORE DIT GOVT ALLOTMENT CPS NEW NUMBER

Click Here..Vellore dist Aided Cps new number allotted.

IN WHOLE TN NEW NUMBER S
http://www.tn.gov.in/karuvoolam/cps_new/

Related Links

http://www.nellai.tn.nic.in/epension/index.asp

http://www.agae.tn.nic.in/

http://www.finmin.nic.in/

http://www.cga.nic.in/

http://www.incometaxtn.gov.in/

http://www.tn.gov.in/citizen/fin-pension-2002.htm

e-Pension Website of District Treasury, Tirunelveli
Accountant General (A&E), Tamil Nadu, Chennai
Ministry of Finance and Company Affairs
Reserve Bank of India
Union Budget
Comptroller and Auditor General of India
Controller General of Accounts
Central Pension Accounting Office
Income Tax Department, Tamil Nadu
Economic Survey of India
Citizens Charter of Finance Department - Pension & Other Retirement Benefits
National Portal of India

ALL TRS TN Siva
Tirupattur




T.N.GOVT EMPLOYEES IMPORTANT G.O"S

T.N.GOVT EMPLOYEES IMPORTANT G.O"S

முக்கிய அரசாணைகள்









(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)



(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)





(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)



(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)





(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)



(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)



(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)



(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)



(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)



(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

Friday 24 February 2017

EMIS ONLINE ENTRY - STEP BY STEP PROCEDURE...ஆன்லைனில் பதிவிடும் முறை !!

EMIS ONLINE ENTRY - STEP BY STEP PROCEDURE...

EMIS ONLINE ENTRY IN JPG FORMAT...EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை !!



1.முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்
( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.
            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.
.

  4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.
4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.
4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.
4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A
4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.
4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.

குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).
4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.
4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.
4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.

4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)
4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.
4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)
4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.
4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)
4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.
4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (--------- இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)
4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.
4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.
4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)
4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.
4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் --------- அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).
4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.
4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.
4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)
4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)
4e, அகடமிக் இயர் 2014 - 2015 என பதிவிடவும்.
4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)
நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

சில டிப்ஸ்

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
              முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)
பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR  MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும்
Internal Server Error
  வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!
இப்பதிவு நீண்ட கட்டுரையாக தெரிந்தாலும் நேரடியாக 10 மாணவர்கள் விபரம் பதிவு செய்து விட்டால் நமக்கே எளிதாகிவிடும்.
                        இதில் மாற்றங்கள் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அவ்வப்போது திருத்தி வெளியிடப்படும்.மேலே குறிப்பிடப்பட்ட   படங்களைப்பார்த்து புரிந்து கொள்ளவும்.

ALL Trs TN Siva Tirupattur

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது. நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த

அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது. மேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு, எந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் மேற்கண்ட பட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும். அப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால் இந்த சங்கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில், அவருடைய உறவினர்கள் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. ஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது. ஏற்கனவே K. Srinivasan Vs State of Tamilnadu and Others (W. P. NO - 13594 & 29192/2013 என்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என Star Health And Alaid Insurance company Ltd Vs Sokkan And Others (2010-2-LW-90) என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான் என்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)

Wednesday 22 February 2017

ஏப்ரல் முதல் "ஸ்மார்ட் ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.

ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.


ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்
.சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதில், அவர் பேசியது:-இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.புதிய அட்டைகள்: இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.






இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :

1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.

2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tuesday 21 February 2017

Tax benefit of NPS(CPS)*.80 CCD1& 80 CCD1B

*Tax benefit of NPS(CPS)*



NPS (cps)tax benefits are available through 3 sections – 80CCD(1), 80CCD(2) and 80CCD(1B). All the tax benefits, annuity restrictions, exit and withdrawal rules are applicable to NPS ( cps)Tier-I account only. NPS (cps)Tier-II account is like an open ended mutual fund. You can take out the money at any time.



*Section 80CCD(1)*



 Employee contribution up to 10% of basic salary and dearness allowance (DA) up to 1.5 lakh is eligible for tax deduction.

This contribution along with Sec 80C has 1.5 Lakh investment limit for tax deduction.

Self employed can also claim this tax benefit. However the limit is 10% of their annual income up to maximum of Rs 1.5 Lakhs.



*Section 80CCD(2)*



Employer’s contribution up to 10% of basic plus DA is eligible for deduction under this section.

Employer’s contribution is an additional deduction as it not part of Rs 1.5 lakh allowed under Section 80C.

It is also beneficial for employer as it can claim tax benefit for its contribution by showing it as business expense in the profit and loss account.

Self employed cannot claim this tax benefit.



*Section 80CCD(1B)*



Additional exemption up to Rs 50,000 in NPS(cpd) is eligible for income tax deduction.

Introduced in Budget 2015, fro FY 2015-16

Taxpayers in the highest tax bracket of 30 per cent can save Rs. 15,000 by investing Rs. 50,000 in the NPS. Those in the 20 per cent tax bracket can save aroundRs. 10,000, while people in the 10 per cent tax bracket can save Rs. 5,000 per year by investing in the NPS.

The additional tax benefit of 50000 is over and above the benefit of 1.5 Lakhs which can be claimed as a deduction under Section 80CCE.

It is irrespective of the type of employment. So, a government employee, a private sector employee, self employed or an ordinary citizen can claim benefit of Rs 50,000 under Section 80CCD(1B).



*Therefore, the total tax benefits that can be claimed for NPS under Section 80CCD(1) + Section 80CCD(1B) equals to 2 Lakhs for this financial year.*



If Employees have savings Rs. 1,50,000 under 80C excluding NPS or CPS Deductions, Then the Employee can show their NPS(cps)  Deductions, under 80 CCD(1B), which is over the 1,50,000 Limit.



*If the Employee have less than 1.5 Lakh savings in 80C and exceeds 50,000 towards NPS(cps), then the Employee can split their NPS(Cps) Amount to 80CCD(1) and 80CCD(IB).*

Click Here..80 CCD clarification..

*Siva, leader.*

Tams Tirupattur blk.



*ALL Trs Tn Siva*

Tirupattur block

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry  பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.


அனைத்து மாணவர்களின் விவரங்களையும் updates செய்யலாம்.

Click Here..
ALL Trs TN Siva 
Tirupattur block

Wednesday 15 February 2017

TAMS-புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி பிரிவு 80 CCCD1(B) ன் படி CPS தொகையில் மேலும் தனிக்கழிவாக ரூ.50000/- ஐ கழித்து கொள்வது குறித்து தெளிவு வழங்குதல் சார்ந்து*

*தமிழக அரசு ஊழியர்கள்,மற்றும் ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி பிரிவு 80 CCCD1(B) ன் படி  CPS தொகையில் மேலும் தனிக்கழிவாக ரூ.50000/- ஐ கழித்து கொள்வது குறித்து தெளிவு வழங்குதல் சார்ந்து*             """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க  மாநில தலைவர் திரு.*கு.தியாகராஜன்*,அவர்களது அலோசனை பேரின் நமது மாநில பொதுச் செயலர் *திரு.ஏ.இரமேஷ்* அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள மாநில கருவூல அதிகாரியை தொடர்பு கொண்டு மத்திய அரசின் வருமானவரி 2015-ன் படி விரிவுபடுத்தப்பட்ட 80 Ccd section. கீழ் உள்ள 80 CCD 1,80 CCD1 B,80CCD2 என்ற பிரிவுகளில் CPS -ல் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, பிரிவு 80 C-ன் படி வருமான சேமிப்பு ரூ. 150000/- க்கு மேல் உள்ளவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்கள் செலுத்திய  CPS பணத்தில் ரூ.50000/- ம் வரை தனிக்கழிவாக கழித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது என்பதனை மாநில கருவூல அலுவலர் அவர்களுக்கு எடுத்துக்கூறி CPS ல் ஒருவர் செலுத்திய பனத்தை 80CCD1B- ல் தனிக்கழிவாக ரூ.50000/- கழித்துகொள்ள கோரிக்கை வைத்தார்.    
Click Here Tams request letter
   
Click Here mail from state Income Tax off for CPS deduction up to 50_000

இதனை அடுத்து மாநில கருவூல அதிகாரிகள் 2015 ன்படி விரிவுபடுத்தப்பட்ட IT Rule அறிக்கையின் படி உள்ள விதிகளை ஆராய்ந்து தங்களது கோரிக்கையை ஏற்பதாகவும் கூறினார்.


   மேலும் மாநில கருவூல அலுவலர் அவர்கள், மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு CPS தொகையை தனிக்கழிவாக மேலும் ரூ.50000 /- வரை பிரிவு 80CCCD 1 (B) -ன் படி கழித்து கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட சார் கருவூலகங்களுக்கு தகவல் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.          

 இது தொடர்பாக இன்று 15.02.17 மாலை மீண்டும் வேலூர் மாவட்ட கருவூல அதிகாரியை தொடர்பு கொண்டு இது தொடர்பாக எடுத்துக் கூறினோம்.

மாவட்ட கருவூல அதிகரியும் மாநில கருவூல அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்ததாகவும் இதனை வேலூர் மாவட்ட அனைத்து சார்கருவூலகங்களுக்கும் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.  

எனவே CPS திட்டத்தின் கீழ் உள்ள ஆசிரிய பெருமக்கள் மேற்கூறிய 80 CCD1 B பிரிவின்படி மேலும் ரூ.50000/- வரை கழித்துக் கொள்ளலாம் என்று கூறினார்,


 மேலும் சார் கருவூல அலுவலர்கள் ஏதேனும் மறுப்போ சந்தேகமோ இருப்பின்  Vellore dt 0416-2253106 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.


  தொடர் முயற்சிகள் மேற்க்கொண்டு 2004 க்கு பிறகு CPS திட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கு வெற்றி தேடிதந்த நமது சங்க மாநில பொதுச் செயலாளர் *திரு.ஏ.இரமேஷ்* அவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட செயலர் "திரு.உதுமான்* அவர்களுக்கும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட தமிழகத்தின் அனைத்து *மாவட்ட, ஒன்றிய பொருப்பாள்களுக்கும்* வேலூர் மாவட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்          

   இவண். *G. D.பாபு*மாவட்ட செயலர்,

த.ஆ.மு.சங்கம்  வேலூர் மாவட்டம்

மற்றும்
மு.சிவக்குமார்,தலைவர்,திருப்பத்தூர்.

Sunday 12 February 2017

All Rules of 80 CCD for CPS Employees Income Tax Deductions* சி.பிஎஸ் ஆசிரியர்கள் கவனத்திற்கு Tax Deduction..

*All Rules of 80 CCD for CPS Employees Income Tax Deductions*



Details of All Rules of 80 CCD for CPS Employees Income Tax Deductions. Deduction in respect of contribution to pension scheme of Central Government. *Section - 80CCD, Income-tax Act, 1961-2015. Deductions allowed under 80CCD(1),80CCD(IB),80CCD(2) as applicable for Contributory Pension Scheme CPS Employees* while computing Income Tax or submitting their Tax Returns. Let us discuss the Benefits and Deficits (Merits and De-Merits)



*All Rules of 80 CCD for CPS Employees Income Tax Deductions

Before going to the Deductions Sections for CPS Employees under Section 80CCD Let us know a horrible thing as per the Income Tax Act Section - 17, of Income-tax Act, 1961 as amended 2015,

Rule (1)(viii) and And Rule 5.2.1 of Income Tax Circular 2015-16*



*Salary Includes the contribution made by the Central Government or any other employer in the previous year, to the account of an employee under a pension scheme referred to in section 80CCD.*



*Explanation:*

The contribution made by the Central Government or any other employer to the account of the employee (Matching Grant for CPS Contribution) under the New Pension Scheme as notified vide *Notification F.N. 5/7/2003- ECB&PR dated 22.12.2003 stated in  Annexure VII referred to in section 80CCD*



Let us briefly have a look at the F.No. 5/7/2003-ECB &PR- The government approved on 23rd August, 2003. It states that "The system would be mandatory for all new recruits to the Central Government service from 1st of January 2004 (except the armed forces in the first stage). The monthly contribution would be 10 percent of the salary and DA to be paid by the employee and matched by the Central government. However, there will be no contribution form the Government in respect of individuals who are not Government employees. The contribution and investment returns would be deposited in a non-withdrawable pension tier-I account. ....."



*Note that this contribution by Employer can be shown in Deductions in 80CCD(2)..**Refer below to now more.

Deductions allowed under 80CCD for CPS Employees

As per the Income Tax Act 1961 as amended by Finance Act 2015 and Income Tax Circular issued for 2015 the Rule under 80 CCD is as follows:



Rule: 5.5.3 Deduction in respect of contribution to pension scheme of Central Govt (Section 80CCD) www.apteachers.in:



Section 80CCD(1)

Section 80 CCD(1) allows an employee, being an individual employed by the Central *Government on or after 01.01.2004 or being an individual employed by any other employer,or any other assessee being an individual, a deduction of an amount paid or deposited out of his income chargeable to tax under a pension scheme as notified vide Notification F. N. 5/7/2003- ECB&PR dated 22.12.2003*



 National Pension System-NPS or as may be notified by the Central Government. However, the deduction shall not exceed an amount equal to 10% of his salary (includes Dearness Allowance but excludes all other allowance and perquisites).



*So 10% CPS Subscription amount can be shown in 80CCD(1) section in Deductions. We should note that this 10% CPS Subscription comes into the Tier-1 Account. (Means mandatory subscription for employees)



This 80CCD(IB) is newly inserted in section 80CCD by the Finance Act, 2015, w.e.f. 1-4-2016

As per section 80 CCD(1B), an assessee referred to in 80CCD(1) shall be allowed an deduction in computation of his income, of the whole of the amount paid or deposited in the previous year in his account under the pension scheme notified or as may be notified by the Central Government, which shall not exceed Rs. 50,000. The deduction of Rs. 50,000 shall be allowed whether or not any deduction is allowed under sub-section(1). However, the same amount cannot be claimed both under sub-section (1) and sub-section (1B) of section 80CCD. Full Details at www.apeachers.in



NPS allows you an additional tax deduction on saving of Rs. 50,000 over and above the limit of Rs. 1.50 lakhs available under section 80C of the income tax Act, 1961. The exclusive tax benefit of Rs. 50,000 u/s 80CCD(1B) has made an investment option for saving tax. With the ending of the financial year round the corner, To take the benefits of this tax saving plan, you may approach the Nodal Office or visit www.npstrust.org.in for making online contribution.



Section - 80CCD(2)

As per Section 80 CCD(2), where any contribution in the said pension scheme is made by the *Central Government or any other employer then the employee shall be allowed* a deduction from his total income of the whole amount contributed by the *Central Government or any other employer subject to limit of 10% of his salary of the previous year.*



Hence The contributions made by your employer (Govt Matching Grant) towards your NPS account qualifies for deduction under Section 80CCD (2) without attracting the limit of Rs 1.5 lakhs laid down in Section 80 CCE from the financial year 2011-12.



*The contribution made by the Central Government or any other employer (State Govt also) to a pension scheme u/s 80CCD(2) shall be excluded from the limit of Rs.1,50,000/- provided under this section.*



If any amount is standing to the credit of the employee in the pension scheme referred above and deduction has been allowed as stated above, and the employee or his nominee receives this amount together with the amount accrued thereon, due to the reason of

(i) Closure or opting out of the pension scheme or

(ii) Pension received from the annuity plan purchased and taken on such closure or opting out then the amount so received during the FYs shall be the income of the employee or his nominee for that Financial Year and accordingly will be charged to tax.



Where any amount paid or deposited by the employee has been taken into account for the purposes of this section, a deduction with reference to such amount shall not be allowed under section 80C.



Further it has been specified that w.e.f 01.04.09 any amount received by the employee from the New Pension Scheme shall be deemed not to have been received in the previous year if such amount is used for purchasing an annuity plan in the same previous year.



*Important Note:*



It is emphasized that as per the section 80CCE the aggregate amount of deduction under sections 80C, 80CCC and Section 80CCD(1) shall not exceed Rs.1,50,000/-. The deduction allowed under section 80 CCD(1B) is an additional deduction in respect of any amount paid in the NPS upto Rs. 50,000/-. *However, the contribution made by the Central Government or any other employer (State Govt also)  to a pension scheme u/s 80CCD(2) shall be excluded from the limit of Rs.1,50,000/- provided under this section*. These are the rules of 80CCD for Employees Income Tax Deductions.





அன்பார்ந்த சிபிஎஸ் ஆசிரியர்கள் விழிப்புணர்வு தேவை அரசு தெளிவாக வருமானவரி விதியில் 2015 ம் ஆண்டில் 80 CCD, 80 ccd1 b, 80 CCD 2  தெளிவான தகவல்கள் இருந்தும் இந்த கருவூல அதிகாரிகளும்,கல்வி அதிகாரிகளும் விதியை பார்க்காமலே அவர்,இவர் சொல்லுகிறார் என்று ஆசிரியர்களின் உரிமையை மறுக்கிறார்கள், இதுவரை யாராவது மாவட்ட வருமானவரி அதிகாரிகளின் ஆலொசனை கேட்டு நமக்கு விளக்கம் அளிக்கிறார்களா? இல்லையே..

இவர்களே வருமானவரி அதிகாரிகள் போல அது முடியாது..இது முடியாது என்று கூறுகிறார்களே தவிர இதுவரை எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை..



நன்றாக சிந்தித்து பாருங்கள் ஆசிரிய நண்பர்களே..

Tax படிவத்தை பார்பதற்கும், சரியாக இருக்கிறதா என்று பார்பதற்கு 10 வருடம் வருமானவரி துறையில் பணிபுரிந்த அனுபவ ஆசிரியர்களை கொண்டு பார்ப்பதைபோல் இவர்கள் கூறுகிறார்கள்.. அது முடியாது..இது முடியாது என்று..



அதுவும் இல்லாமல் படிவத்துடன் தேவையில்லாத ஆவணங்கள் இனைக்க வேண்டும் என்பார்கள்..

Pay slip,Ration card, Online play drawn, Adhaar card ,bank passbook, passport இப்படி எதுவல்லாம் தோனுதோ அதையேல்லாம் எடுத்துவா என்றும் கேட்பார்கள்..



CPS DEDUCTION விளக்கம் IT Rulesல் 25 பக்கம் தெளிவாக உள்ளது. மேலும் திருச்சி Income Tax Joint Commissioner கழித்துகொள்ளலாம் என்கிறார். மேலும் தமிழகத்தின் பல மாவட்ட கருவூல மண்டல அலுவலகம் கழிக்கலாம் என்கிறார்கள், சில ஒன்றிய கருவூலம் அலுவலர்கள் என்கிறார்கள்.. ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர்.. இது அவர்கள் அறியாமை...விளக்குங்கள் தெளிவாக..



திருச்சி வேறு மாநிலத்தில் உள்ளதா?..



நண்பர்களே போராடினால்தான் எதுவுமே கிடைக்கும்..



அன்பு ஆசிரியர்களே இனியும் கால தாமதம் இன்றி சிந்தித்து ஒரு சில மாவட்டம் மற்றும் ஒன்றியத்தின் ஆசிரியர்கள் சிபிஎஸ் தனிக்கழிவு வருமானவரி விலக்கு பெற அனைவருக்கும் தெளிவாக எடுத்து கூறி அனைவரையும் பயன்பெற சங்க பொறுப்பாளர்கள் இனியும் தாமதப்படுத்தாமல் ஆசிரியர்கள் உரிமையை மீட்டெடுங்கள் என்று அனைத்து உள்ளங்களையும் கேட்டுக்கொள்கிறோம்..

நன்றி..



Visit more details

www.alltrstnsiva.blogspot.com





அன்புடன்

*ஜி.டி.பாபு,*மாவட்ட செயலர்

TAMS,VLR DT.

உதுமான்,மாவட்ட செயலர்

TAM'S, TRICHY DT.

*மு.சிவக்குமார், ப.ஆ*

LDR.TAMS,TIRUPATTUR.



By *ALL TRS TN Siva*

Tirupattur block

INCOME TAX CALCULATION EXCEL SHEET - TAMILAGAASIRIYAR BEST IT EXCEL SHEET RELEASED.....

INCOME TAX CALCULATION EXCEL SHEET - TAMILAGAASIRIYAR BEST IT EXCEL SHEET RELEASED.....



FEATURES:- IT 2016 FOR CPS TEACHERS....

BASIC SALARY, GRADE PAY,PP AND HRA   ENTRY ARE MANUAL .............
DA CALCULATED AUTOMATICALLY....
CPS  CALCULATED AUTOMATICALLY...
DA ARREAR AND SURRENDER ARE MANUAL

Click Here Tax Calculater

CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவணத்திற்கு. CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENTS LETTER, STATEMENTS

CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENTS LETTER, STATEMENTS

CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவணத்திற்கு:

  தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட (Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,  அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letter ஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.
அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link ஐ Google ல் type செய்யவும்,

CLICK HERE CPS WEB AND DOWNLOAD
 
என்று type செய்தால் தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth கேட்கும் அதனைப் பதிவு செய்து  Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps account page க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம், நன்றி!!!

ALL TRS TN Siva
Tirupattur block.

Wednesday 8 February 2017

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50 ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து RTI – ல் பெறப்பட்ட நகல் இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்தக் கழிவு 1.4.2016 முதல் உள்ளதால் பெரும்பாலானவர்கள் மறுக்கின்றனர். முதல் முறையாக எதைப் பெறவும் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம் வெற்றி பெறுவோம். என்றும் CPS ஆசிரியர்களில் நலனில் அக்கறையோடு செயல்படும்,

*What is the New Pension System (NPS)?*

The NPS is a new contributory pension scheme introduced by the Central Government for its own new employees. Under the new pension system, each new  government employee will open a personal retirement account on joining service. Every month, and till the employee retires or leaves government service, a part of the employee's salary will be transferred into this account. When the person retires, he will be able to use these savings to take care of the needs and expenses of his family during old age.

*ALL TRS TN Siva*

அன்புடன்

*ஜி.டி. பாபு, மாவட்ட செயலர்*
வேலூர் மாவட்டம்.

*CPS உதுமான்*, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம்.

உடன்  மு.சிவக்குமார், தலைவர்
திருப்பத்தூர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

கணினி ஆசிரியர் வாழ்வில் விடியல் மாபெரும் பொதுக்குழுக் கூட்டம் கடலூா் மாவட்டம் தொழுதூரில் ....

கணினி ஆசிரியர் வாழ்வில் விடியல் மாபெரும் பொதுக்குழுக் கூட்டம் கடலூா் மாவட்டம் தொழுதூரில் ....





கணினி ஆசிரியர்கள் கவனத்திற்க்கு.....



  எங்களுக்கு  வேலை கொடுங்க...!

ஏழைக் குழந்தைக்கு தமிழகத்தில் தரமிகு கல்வி கொடுங்க..!



கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்

19.02.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது கணினி  ஆசிரியர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேணடும்.

(வேலையில்லாமல் வாடும் கணினி ஆசிரியர்களே உங்கள் பணி வாயப்பை உறுதி செய்ய அனைவரும்

வாரீர்.)



இடம்:  ராமநத்தம் ஊராட்சி மண்டபம்.

தொழுதூர்  NH - 45

நாள் :19.2.2017

நேரம்:9.00 காலை மணி.

மதிய உணவு  வழங்கப்படும்.



குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.



இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு

கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:

இரண்டு புகைப்படம்,

பி.எட் சான்றிதழ் நகல்,

வேலைவாய்ப்பு அட்டை நகல்,



இவற்றுடன் தங்களின்

சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.



பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.



கணினி ஆசிரியர்களே வாரீர் வாரீர் கடலூர் நோக்கிய வெற்றிப் பயணத்ததிற்க்கு அனைவரும்  வாரீர் .......



கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தொடர்புக்கு:

9655542577, 9942380309,

9698339298,9443562682.



வெ.குமரேசன் ,

மாநிலப் பொதுச் செயலாளர்,

9626545446.

தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .

பதிவு எண்:655/2014



ALL TRS TN Siva

 Tirupattur block

Friday 3 February 2017

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு வருமான வரி விலக்கு.

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு வருமான வரி விலக்கு..





CPS தோழர்கள் கவனத்திற்கு.

கடந்த 2006 முதல் காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர்கள் தற்போது Taxable income Rs.5 இலட்சத்திற்கு மேல் வரும் நிலை இவ்வாண்டு வரும் நிலை உள்ளது. இதனால் வரியில் இருந்து 5 ஆயிரம் 87A மூலம் பெற முடியாது.



CPS ஆசிரியர்களுக்கு மட்டும் 80C-ல் 1,50,000 மேல் சேமிப்பு கழித்த பிறகு 80CCD(1B) –ல் மேலும் 50,000 கழிக்கலாம். ஆகவே இவ்வாண்டு தங்கள் சேமிப்பு CPC சந்தா உடன் சேர்த்து 2 இலட்சம் வரை சேமிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதாரம்: Income tax TDS-2017 Guide Page Number-22

section 80CCE the aggregate amount of deduction under sections 80C, 80CCC and Section

80CCD(1) shall not exceed Rs.1,50,000/-.

The deduction allowed under section 80 CCD(1B) is an additional deduction in

respect of any amount paid in the NPS up to Rs. 50,000/-. However, the contribution made by the Central Government or any other employer to a pension scheme u/s 80CCD(2) shall be excluded from the limit of Rs.1,50,000/- provided under this section.



ALL TRS TN Siva