Powered By Blogger

Sunday 31 July 2016

AEEO பொதுமாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவைகள் தொடக்ககல்வி இயக்குநர் செயல்முறைகள்


வரும் ஆகஸ்ட் 3,4 ல் நடைபெறும் AEEO பொதுமாறுதல் பதவிஉயர்வு  கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவைகள்  தொடக்ககல்வி
 இயக்குநர் செயல்முறைகள் 002881/I1/30.7.16*  




Saturday 30 July 2016

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம் 


 அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம்
செய்யப்பட உள்ளனர். 

        'இந்த இடமாற்றத்தில் தில்லுமுல்லு இருக்க கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றரை கோடி மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மட்டும், 4.5 லட்சம் ஆசிரியர் பணிபுரிகின்றனர்.ஆகஸ்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்பத்தின்படி, இடமாறுதல் வழங்கப்படும்; இதற்காக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 'இந்த ஆண்டுக்கானகவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடத்தும் முன்,பள்ளிகளில் ஆகஸ்ட் 1ம் தேதிப்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, இந்த விகிதத்தில் கூடுதலாகஉள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறையான பள்ளிகளுக்கு மாற்றுவர். இந்த கணக்கீட்டில், ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தான் நடக்கின்றன. ஆனால், பணி நிரவலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, கல்வித்துறை அக்கறை காட்டுவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், அடுத்தடுத்தஆண்டுகளில், மீண்டும் பணிநிரவல் நடக்கிறது.

ஓராண்டில் அதிக ஆசிரியர்களின் இடங்கள் சரிசெய்யப்பட்டால், மீண்டும் எப்படி அதிக ஆசிரியர்கள் இருக்க முடியும் என்பது கல்வித்துறைக்கே பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. ஆண்டுதோறும் அதிக ஆசிரியர்கள்இருப்பதாக கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதாகவே தெரிகிறது. இதையும் கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு மட்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2,000 ஆசிரியர்; தொடக்க பள்ளிகளில், 3,000ஆசிரியர் கூடுதலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லுமுல்லு :

அதேநேரம், பணி நிரவலில் பல தில்லுமுல்லுகளும் நடப்பதாக தெரிய வந்துள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்கள் என்றால், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், விகிதப்படி அதிக ஆசிரியர்கள் இருந்தாலும், பணிநிரவல் செய்வதில்லை. மேலும், பணி நிரவலில் முக்கிய பணியிடங்களை மறைத்து, சிபாரிசுப்படி, பணிமாறுதல் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.பணி நிரவல் நடவடிக்கையில் காலியாக உள்ள இடங்களை, மாவட்டவாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பணி நிரவலை மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம்நடத்த வேண்டும். பணி முடிந்த பின், வேண்டப்பட்டஆசிரியர்களுக்கு மட்டும் விதிகளை தளர்த்தி இடமாறுதல் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  

ALL TRS TN... Siva

அரசு ஊழியர்கள் -அனைத்து விடுப்பு விதிகள் சுருக்கம்



அரசு ஊழியர்கள் -அனைத்து விடுப்பு விதிகள் சுருக்கம்.





CLICK HERE...GENERAL LEAVE RULES

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ தொடவும்(VP).

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய  கணக்கில்
 வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ தொடவும்(VP).  

CLICK HERE...Treasury2.tn.gov.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்...நாமும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு 

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம் 

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்
 
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

ALL TRS TN,. Siva.

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*மூலிகைப்பொடி பயன்கள்.

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*மூலிகைப்பொடி பயன்கள்.

 மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?* 

*அருகம்புல் பொடி* 
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* 
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* 
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி* 
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* 
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* 
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி* 
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி* 
ஆண்மை குறைபாடு, 
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி* 
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* 
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* 
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* 
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* 
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* 
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* 
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* 
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி* 
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* 
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* 
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* 
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி* 
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி* 
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* 
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* 
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* 
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* 
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி* 
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஏலகிரி ஓட்டல்.சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் ஏலகிரி ஓட்டல்.சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்
இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்
சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்
காசு கேட்பதில்லை. பணத்துக்குப்
பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா? விசாரித்தபோதுதான்
மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), ‘பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100
மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்
மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்
அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்
பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.
மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்
அவர்கள் ஜோலார்பேட்டையில
ேயே சுற்றித்திரிகின்றனர்.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது”
என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான
உணவை அவர்களது குடும்பத்தினர்
வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின்
மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை. வழக்க
மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5
கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்
மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்
இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்
தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாக
இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
‘வாடி நிற்கும்' நாகராஜ்.

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs ,

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும்.
Be alert all govt staffs ,

நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் .
மேலும்  விவரங்களுக்கு 
DHIRAVIAM TAX SERVICES PARAMAKUDI RAMNAD SIVAGANGAI
9843806320 , 9442291325 DHIRAVIAM.TAX@GMAIL.COM.

தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் !

தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் !

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

*.தேசியக் கொடியை, மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தக் கூடாது.
*.அரசு அறிவிப்பின்றி, அரை கம்பம் அல்லதுமுக்கால் கம்பத்தில், பறக்க விடக் கூடாது. இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.
*.தேசியக் கொடிக்கு சரியான முறையில், 'சல்யூட்' செய்தல் வேண்டும்.
*.கொடியின் மேல்பக்க காவி நிறத்தை, உள்நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல், தரையில் மண் படும்படி இழுத்தல் கூடாது.பழைய சாயம் போன, கிழிந்த கொடியை பயன்படுத்த கூடாது.
*.கொடியை தங்கள் உடையின் ஒரு பகுதியாகவோ,இடுப்பு கீழ் அணியும் உடையாகவோ, ஆபரணம்,அலங்காரமாகவோ பயன்படுத்த கூடாது.
*.இந்த விதிகளை பின்பற்ற, மாணவர்கள், பள்ளி, கல்லுாரி ஊழியர், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு. 


        கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

         தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில்
கடைசியாக நடந்தது.   வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.


கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை எதிர்த்து-மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது

எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை   எதிர்த்து சட்ட விரோதமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரால்
18.01.2013 கு பிறகு மட்டுமே பொருந்தும் என்ற அடிப்படை அரசாணைக்கு விரோதமாக ஒரு விளக்க கடிதம் அளிக்கப்பட்டு அதனை கல்வித்துறை அலுவலர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு 18.01.2013 கு முன்பு பெற்ற பணத்தினை செலுத்திட ஆணை பிறப்பித்தார்கள்.
தணிக்கை துறையினர் புது விதமாக அரசாணை 42 ஐ கண்டுகொள்ளாமல்
மேலெழுந்த வாரியாக உடன் பணத்தினை 18.01.2013 கு முன்பு வாங்கியது
தவறு என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் இதனை எதிர்த்து மதுரை
உயர் நீதி மன்றத்தில் தடையாணை கோரி வழக்கு ஆசிரிய சங்கம் மூலமாக
  
1. பள்ளி கல்வி துறை  செயலாளர் அவர்கள்
2.பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள்
  3.தணிக்கை துறை மதுரை அலுவலர் அவர்கள்
4.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
5..ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
6.ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்
7. பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர்  அவர்கள்
8.திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
. அந்தந்த -சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்
எதிர் மனுதாரர்களாக கொண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில்
இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது
மேலும் இதனை காரணம் காட்டி தேர்வு நிலை நிறுத்தி வைப்பது சட்ட விரோதம் என்று வாதாடப்பட்டது ஊக்க ஊதியம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஒரு ஆசிரியர் 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வு நிலை வழங்கப்பட வேண்டும் என்று 1970 முதல் நடை முறையில் இருந்து வரும் விதி என்பதனையும் அது இன்றும் தொடர்கிறது ஆகவே இதனை தடுத்தி நிறுத்திட யாருக்கும் உரிமை இல்லை என்றும் வாதிடப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்  இப்போது வரை அரசாணை 42 ஐ பின்பற்றி பெற்று வரும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் 18/01.2013 என்று cut of தேதி வைப்பது சட்டவிரோதம் என்பதனை நீபதி ஏற்று கொண்டார்
வரும்  வாரத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் மூலம் serve செய்யப்படும் 


கால அவகாசம் நீடிப்பு வருமான வரி கணக்கை ஆகஸ்டு 5–ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் மத்திய அரசு அறிவிப்பு..

கால அவகாசம் நீடிப்பு வருமான வரி கணக்கை ஆகஸ்டு 5–ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் மத்திய அரசு அறிவிப்பு..


புதுடெல்லி: வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31–ந்தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். அதன்படி, 2016–2017–ம் மதிப்பீடு ஆண்டுக்கான வருமான
வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடு வருகிற ஆகஸ்டு 5–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 5–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்த மாநிலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 31–ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் 

அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்
தகவல்-திருமதி .சாந்தாபேபி -த.ஆ.திண்டுக்கல் மாவட்டம் -


CLICK HERE...OBC-Department of Personnel and Training O.M. No.36033/5/2004-Estt.(SCT), October, 2004, to all Ministries/Departments

முக்கிய குறிப்புகள் -

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .

3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும்  Grade B  நிலையில் நியமனம் 
பெற்றிருக்கக் கூடாது.

4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால்   நேரடியாக  Grade A  நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள்    Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.

5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது 

5.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் .....

Friday 29 July 2016

தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு  


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை  ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு  மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், பட்டூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். தமிழரசி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்ட புக்கத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கற்பகவல்லி, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அஞ்சூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சரசுவதி, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனகாபுத்தூர், அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.பரிமளம், மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலராகவும், கோவிலம் பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம்,  பழையநாப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.கே.கங்காதர ரெட்டி, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராகவும், ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜி.லில்லிபுஷ்பராணி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், அயப்பாக்கம், அரசு உயர்நிலைப் ்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எத்திராஜூலு, சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்  சிவ்வாடா அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இ.செந்தமிழ்ச்செல்வி, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  சென்னை, அடையார் அடுத்த ஊரூர் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எடிசன், சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  இவ்வாறு அந்த உத்தரவில் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு. 


'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது. 


ஆனால், அதன் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், 'எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என, அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், குழுவினர் சந்திக்கவில்லை.சட்டசபையில், இதுகுறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'வல்லுனர் குழு அறிக்கை அளித்ததும் முடிவு செய்யப்படும்' என்றார்.


அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 'குழுவில், இருவர்
பதவியை ராஜினாமா செய்து விட்டனரே; குழு எப்படி கூடும்' என, கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், 'வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்' என்றார்.அதன்படி, வல்லுனர் குழுவை மாற்றி அமைத்தும், குழுவின் பதவி காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியத்திற்கு பதிலாக, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஷ் சி புராகித், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'. 

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 53 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல், திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் கிடைக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், 'இந்தாண்டு, ஜனவரி, 1ம் தேதி முதல், சம்பளக் கமிஷன் நடைமுறைக்கு வருவதால், அதற்கான, அரியர்ஸ் பணமும், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் திருத்தி அமைப்பதற்கு முன்பு இருந்த, டி.ஏ., எனப்படும் அகவிலைப்படியான, 125 சதவீதம் என்ற அடிப்படையில், புதிய
சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்கப்படும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள சம்பளத்துக்கான, புதிய அகவிலைப்படி பின்னர் அறிவிக்கப்படும்.

Thursday 28 July 2016

TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...

TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில்
தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...
கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -17.12.12 அன்று TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு. 

2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. 
அதன்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகை யில், வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 3-வது வாரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் குரூப்-4 தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்கள் அறிவிப்பை ஆவலுடன்எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமாரிடம் கேட்டபோது, “ஏறத்தாழ 5 ஆயிரம் காலி இடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்றார்.குரூப் - 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியா ளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர்என பல்வேறு விதமான பதவிகள் நிரப்பப்படுகின்றன. 10-ம் வகுப்பு முடித்த வர்கள் குரூப் - 4 தேர்வு எழுதலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசிவகுப்பி னருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர் ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்தி ருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25.  

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25  சட்டப்பேரவையில் அறிவிப்பு .விரைவில் அரசாணை வர வாய்ப்பு :

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !   


வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.

பிஎஃப் கணக்கின் இருப்பைத் தவறாமல் தொடர்ந்து சரிபார்க்க ஊழியர் சேமலாப நிதி அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

பின்வரும் இந்த ஐந்து முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்.

UAN பயன்படுத்திச் சரிபார்த்தல்
**********************************************
யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஊழியர் சேமலாப நிதி அமைப்பினால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

UAN இணையதளத்தில் உங்கள் பிஎஃப் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்து UAN எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி உள்நுழைந்து சந்தாதார்கள் பிஎஃப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றைக் காணலாம்.

மொபைல் எண்
**********************
இணையதளம் பயன்படுத்தி பார்க்க கூடிய இந்த முறையில் உங்கள் பிஎஃப் பகுதியை தேர்வு செய்து பின்னர் உங்கள் பிஎஃப் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதன் மூலமாக பிஎஃப் பங்களிப்பு மற்றும் நடப்பு இருப்புத் தொகை போன்றவற்றை மொபைலில் குறுந்தகவலாகப் பெறலாம்

எஸ்எம்எஸ் சேவை
******************************
ஊழியர் சேமலாப நிதி அமைப்பு SMS சேவை மூலமாகவும் பேஃப் தொகை அறியும் சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. EPFOHO UAN என்று உங்கள் 12 இலக்க UAN-ஐ 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி நீங்கள் பிஎஃப் விவரங்களைப் பெறலாம்.

மிஸ்டு கால் சேவை
*******************************
இந்தச் சேவை மூலமாக UAN-ஐ பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் அளித்தும் இலவசமாக உங்கள் பிஎஃப் விவரங்களைப் பெறலாம்.

செயலி
***********
ஆண்ட்ராட்டு ஸ்மார்ட் ஃபோன் பயனர்கள் ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) மொபைல் செயலியான எம்-சேவா (M-Sewa)-ஐ மொபைலில் பதிவிறக்கி UAN-ஐ உள்ளிட்டு பிஎஃப் இருப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.


அந்த குழுவின் பணிக்காலத்தை, ஜீன் 28 தேதியில் இருந்து, மேலும் 3 மாதங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இக்குழுவின் ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஓய்வூதிய திட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்றும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000 !

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000 !

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய்
விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
பள்ளிக் கல்வி ( இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .
படிக்க :
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24 . 3 . 2005 அன்று மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிக்கை .
- - -
ஆணை :
ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே £, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிற து. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையி ல், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெளிணிதிடும்
வகையி ல், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்ப டி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது
நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000/- நிதி வழங்கப்படும். இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ,
மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.
2. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிவுரைகள் தனியாக
வெளியிடப்படும்.
3. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/ திஷி / றி /2005
நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு.ஞானதேசிகன்,
அரசு செயலாளர்.
https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/422805234552977/?type=3&theater
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 6
தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை 6
மெட்ரிக்குலேக்ஷன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 6
மாநில கணக்காயர், சென்னை 18
மாநில கணக்காயர், சென்னை 35
கருவூல கணக்கு ஆணையர், சென்னை 15
நகல்
மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம், சென்னை 9
மாண்புமிகு கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை 9.
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/422805234552977/?type=3&theater

ரூ 75,000 ஆக உயர்த்தபட்ட செய்தி
https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/426633590836808/?type=3&theater

*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்...._*
👉 *_2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்..._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17  கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின்  தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்._*
👉 *_2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்..._*
👉 *_புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்...._*
👉 *_தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்_*
👉 *_இவை அனைத்து ஆகஸ்ட் 7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்..._*

*G.O.No.219*👆PENSION – Contributory Pension Scheme –

*G.O.No.219*👆
*Dt:27.07.16*
PENSION – Contributory Pension Scheme –   
Employees contribution and Government contribution -  Rate
 of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued.  



Tuesday 26 July 2016

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்   


1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.


3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை. 

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். 

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மிகப் பெரிய மோசடி...

# நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மிகப் பெரிய மோசடி...  


"தமிழகத்திலேயே முதன்முறையாக தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி வழங்கி சாதனை...!"
மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் 14.07.2016 முதல் தற்காலிகமாக மூடப்பட்ட மோகனூர் ஒன்றியம், குமரி அய்யம்பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு உடனடியாக காலியாக இருந்த சின்னகரசப்பாளையம பள்ளியின் தலைமை ஆசிரியராக உத்திரவு பிறப்பிக்கப்படாமல் இத்தனை நாட்களாக இழுத்தடித்து, இன்று, 26.07.16 அன்று 14.07.2016 என முன் தேதியிட்டு, தமிழகத்திலேயே முதன்முறையாக தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி வழங்கி சரித்திர சாதனைப் படைத்துள்ளார் நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்....
# 14 ம் தேதிக்கும் 26 ம் தேதிக்கும் இடையில் நடந்தது என்ன? 
# யாருக்காக இப்படி விதிமுறைகள் பணக்காற்றில் பறக்கிறது?
# ஆள் பலம் இல்லாத, அப்பாவி ஆசிரியர்களுக்கு நீதி எட்டாக்கனி தானா?

BT to PG ALL SUBJECTS...01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் to முதுகலை ஆசிரியர்

01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக தமிழ், பொருளியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல். வேதியியல் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல்.  

CLICK HERE....  BT to PG Panal.  


B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்

B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !

ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை இரத்து !
அரசு உதவி பெறும் தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை 1லட்சத்திற்கு  மேல் வந்தால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இயக்குனரின் செயல்முறை ஆணையை   இயக்குனர்  அவர்கள் ரத்து செய்துள்ளார்கள்.

இயக்குனரின் செயல்முறை  ஆணை  


மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வாசிப்புத் திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்துக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் தர மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது.வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தல், மாணவர்களின் எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகளை எழுதுதல் மற்றும் எளிய கணித முறைகளில் அடிப்படைத் திறன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

Monday 25 July 2016

Tn Gov. Health Insurance App ...Download 'TNNHIS-2016'

Download 'TNNHIS-2016'
Dear friends,

Download 'TNNHIS2016' android app from playstore. It's very helpful in getting NHIS treatments, list of hospitals, list of dependents and their details. A must app that should be installed in every Govt. Employee's mobile..

User id example:NMK\01\SB435\NHIS16\123456
Password:Date of birth in dd/mm/yyyy format.

Click Here  TN GOV HEALTH INSURANCE. 



Sunday 24 July 2016

'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.
'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.
கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது.'இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில், பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தரகல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில், இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50 மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200 மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16 ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100 மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே, கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

DEE:பணி நிரவலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 22.07.2016)

DEE:பணி நிரவலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் -    
இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 22.07.2016).  

DEE DEPLOYMENT COUNSELLING GUIDELINES AND INSTRUCTIONS REG 2016-2017. 




பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.
பணி நிரந்தரம்... 

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், முழு பணி நேர பணியுடன் ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு குறையாமல் வழங்கவேண்டும், அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆவண செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.
எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி, புதுப்பேட்டை தெற்கு கூவம் ஆற்று சாலை, லாங்க்ஸ் தோட்டச்சாலை வழியாக எழும்பூர் காந்தி-இர்வின் சாலை சந்திப்பை அடைந்தது. பேரணியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர். காந்தி-இர்வின் சாலை சந்திப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். ஜெயலலிதா நிறைவேற்றி தரவேண்டும் இதையடுத்து தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சேசுராசு, மாநில மகளிரணி தலைவி கீதா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பள்ளி கல்வித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரை சந்தித்து தங்களுடைய மனுவை கொடுப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். பேரணியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகையில், “ தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் என்பதை பிரதானமாக கொண்ட எங்களது கோரிக்கையை தாயுள்ளத்தோடு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி தரவேண்டும் என்பதற்காக கவன ஈர்ப்பு பேரணி நடத்தினோம். எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றி எங்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும்” என்றனர்.

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துபொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளா?, கல்வித்தரம் குறைவா? அல்லது வே்லை வாய்ப்பின்மையா? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 523 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக். இடங் களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. பொறி யியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 34 ஆயி ரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பொது கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மொத்தம் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியிருக்கின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாகவுள்ள உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி:தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலே வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவுகிறது. வெளிநாடுகளில் தொழில் மந்த நிலை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அது இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு களைப் பார்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்பானது பொறியியல் படிப்பில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும் அவற்றின் உரிமையாளர்களின் செல்வச்செழிப்பை பார்த்தும் ஏராளமானோர் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கிவிடுகிறார்கள். புதிய கல்லூரிகளுக்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படவே இல்லை. புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியான பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய வரும் ஏஐசிடிஇ குழுவினர் பெயரளவுக்கு ஆய்வுசெய்துவிட்டு இஷ்டத்துக்கு அனுமதி வழங்கிவிடு கிறார்கள். 

இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகப் படுத்தாததால் காலியிடங்கள் அதிகரித் துள்ளன என்ற கருத்தை ஏற்க முடியாது. தற்போதைய படிப்பிலே நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய பாடங்களை தெரிவு பாடங்களாக (எலெக்டிவ் சப்ஜெக்ட்)எடுத்து படிக்கலாம்.முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பொறியியல் படிப்பதற்கு தேவையான கல்லூரிகள் உள்ளன. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் தரமான கல்வி கிடைக்கும். தரமான கல்வி பெறும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கவே செய்கின்றன. தரமான கல்வி கிடைக்காததால்தான் மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்:

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பொறியியல் கல்லூரிகளின்எண்ணிக்கை மிக மிக அதிகம். அரசு கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். தற்போது பொறியியல் படிப்பில் சேருவோரில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சிய 32 சதவீதம் பேர்தான் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் வேலைநோக்கில்தான் பொறியியல் படிப்பை தேர்வுசெய்கிறார்கள். பலரின் எண்ணமும் சாப்ட்வேர் பணியில் சேருவதாகத்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொருத்தவரையில் 92 சதவீதம் தகவல்தொழில்நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான மாண வர்கள் இசிஇ, ஐடி பிரிவுகளில் சேர விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் வேலையளிக்கும் நிறுவனங்களின் போக் கும் மாறியிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு 25 ஆயிரம்சம்பளம் கொடுக்க வேண்டும். அதே வேலைக்கு சற்று பயிற்சி கொடுத்தால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளை வைத்து பணியைச் செய்யலாம். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும் என்ற என்று நினைக்கின்றனர்.போதிய அளவு மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோன்று பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். எனவே, அடுத்த ஆண்டு நிலைமை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

EMIS:முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு.

EMIS:முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:நிகழ் கல்வியாண்டில் முதல் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், கடந்த ஆண்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படித்தமாணவர்களின் விவரங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. ஏற்கெனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி போன்ற விவரங்கள் விடுப்பட்டிருந்தால்,அவற்றைப் பூர்த்தி செய்வதுடன் விவரங்களைச் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும்கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும்கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதாஎன்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர்உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, அனைவருக்கும் கல்விஇயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாகமாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

Saturday 23 July 2016

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது. 
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க புதிய பணியிடங்களை ஏற்படுத்தஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசை கேட்டு கொண்டார். அதை ஏற்று ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி இயக்குபவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர்,கணினி இயக்குபவர், ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்கள் 903 ஏற்படுத்தப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளுக்கான பட்டியல் தயாரித்து ஏற்பளிப்பு வழங்கவும் அதிகாரமளிக்கப்படுகிறது என அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 07.08.2016 க்குள் முடிக்க உத்தரவு - - இயக்குனர் செயல்முறைகள்

EMIS (2016-17) முதல் வகுப்பு உள்ளீடு செய்யவும், மற்ற வகுப்பு பதிவுகளை சரி செய்யும் பணியை 07.08.2016 க்குள் முடிக்க உத்தரவு - - இயக்குனர் செயல்முறைகள்


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும்,உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.

* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறுமாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.

* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்.

அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமைசெயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday 21 July 2016

TBB | TET | HSE(+2) | TNPSC: PHYSICS very Important Study Material


TRB | TET | HSE(+2) | TNPSC: PHYSICS very Important Study Material

கிளிக் இங்கே



அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.



அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.





சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture), பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய  படிப்பில் சேருவதற்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 11595 விண்ணப்பங்களும், தோட்டக்கலை(B.Sc. Horticulture) படிப்புக்கு 601 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.  அவற்றில் 711 இளநிலை அறிவியல் வேளாண்மை விண்ணப்பங்களும், 35 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “சமவாய்ப்பு” எண்கள் (Random Number) கடந்த ஜூலை 13-ம் தேதி வெளியிடப்பட்டது.



 இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “தரவரிசை பட்டியல்” (Rank List) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது தரவரிசை (Rank)யை தெரிந்து கொள்ளலாம்.  மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள், மேல் நிலை (HSC) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார்செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.



மாற்றுத்திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின்விதிப்படி ஒதுக்கப்படும். இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 23, 25 மற்றும் 26 தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும்.கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள்பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். குறுந்தகவல் (SMS) மூலமாகவும் அனுப்பப்படும்.



மேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in. பார்க்கவும். தொடர்புக்கு auadmission2016@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம் என பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு   


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் வியானன்று (ஜூலை 21)நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தலைவர் என்.ராமசாமி தலைமை தாங்கினார். சேப்பாக்கம் பகுதி செயலாளர் கி.ரகுராமன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி பேசியதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை பத்து நாட்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் சார்பில் நடத்திய போரட்டாத்தின் விளைவாக தமிழக முதலமைச்சர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து சில அரசானைகளும் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அந்த கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அரசு ஊழியர் ஆசிரியர் தொடர்பான நிர்வாக நீதியான வழக்குகளுக்கு என்று தனியாக தீர்ப்பாயம் அமைக்கவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு படிகள் அனைத்தையும் வழங்கவும், ஊதிய முரண்பாடுகளற்ற ஊதிய மாற்றம் வழங்கவும் அதற்கான ஊதியக் குழுவினை அமைக்க வேண்டும். அரசு ஊழியர் ஆசியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டு திட்டதிற்கென்று அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
இவற்றிர்கான ஆணைகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே பிறப்பிக்க வேண்டும்.அதேபோல் ஆளுநர் உரையில் அரசு ஊழியர்களுக்கு செலவு செய்யப்படும் தொகையை சதவிகிதத்தில் தவறாக அறிவித்துள்ளார். அரசுக்கு வரும் வருமானத்தில் உண்மையிலேயே அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற சதவிகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் பி.எஸ்.அப்பர், மாவட்ட செயலாளர் ச.டானியல் ஜெயசிங் ஆகியோர் பேசினர்.இதில் மாநில துணைத் தலைவர் கே.என்.தியாகராஜன், மாவட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட தலைவர் தி.கலைசெல்வி, பகுதி செயலாளர் ம.தேவேந்திரன் உள்ளிட்ட 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சங்க மாநில நிர்வாகிகள் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யமிஸ்ராவிடம் வழங்கினர்.

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள் ஒரு கண்ணோட்டம்

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அருகில் தமிழக முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

*தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
*மதுரையில் பால் பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.
*இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு:

*மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9, 073 கோடி நிதி ஒதுக்கீடு.
*பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.
*வேளாண்துறைக்கு ரூ.1,680.73 கோடி நிதி ஒதுக்கீடு.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு.
* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு.
* நலத்திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு.
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி நிதி ஒதுக்கீடு.
*மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாநில சமச்சீர் நிதியத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
*தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
*ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
*இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.
*தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.
*காவல்துறைக்கு ரூ,6,102.95 கோடி நிதி ஒதுக்கீடு.
*காவல்துறையை கணினிமயமாக்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு.
*இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ,396.74 கோடி ஒதுக்கீடு.
*தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.
*இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தைக் காக்க ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாநில தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு.
*தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2,104.49 கோடி ஒதுக்கீடு.
*வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.652.78 கோடி நிதி ஒதுக்கீடு.
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,429.94 கோடி ஒதுக்கீடு.

தொலைநோக்கு திட்டம் 2023 இலக்குகளை அடைய மாநில அளவில் இந்த 5 இயக்கங்கள் வடிவமைப்பு:

1.நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.
2.குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.
3.வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.
4.தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்.
5.திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.
சலுகைகள் சில:

*கறவை மாடு வாங்குவதற்கான நிதி ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.

*பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படும்.

*இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

*சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

*இஸ்லாமிய உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தப்படும்.

அறிவிப்புகள்:

*லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இதற்காக ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ,23,000 கோடி அளவிலான முதலீடுகள் இதுவரை வந்துள்ளன.

* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ,928 கோடி நிதி ஒதுக்கப்படும்.

*7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிளான மையமாக மாற்றப்படும்.

*ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரை ஓரங்களில் மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிப்பு.

* அடுத்த ஒராண்டில் 3.50 லட்சம் இலவச பட்டா மனைகள் வழங்கப்படும்.

*ஆறுகள் புத்துயிர்த் திட்டத்தின் கீழ் வைகை, நொய்யலாறுதூர்வாரப்படும்.

* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படும்.

*அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

* ரூ.422 கோடி செலவில் காவலர்களுக்கு 2,673 வீடுகள் கட்டித்தரப்படும்.

* வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும்.

பட்ஜெட் ஒதுக்கீடு:

*திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி

* தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 மோடி. மொத்த நிதிபற்றாக்குறை ரூ.40,533.84 கோடி.தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் வந்ததால், கடந்த பிப்ரவரி 16-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றிய பிறகு, சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது.இதையடுத்து, மே 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 6-வது முறை யாக முதல்வராக ஜெயலலிதா மே 23-ம் தேதி பதவியேற்றார்.அதன்பின், 15-வது சட்டப்பேரவை யின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

NEW TRANSFER FORMS 2016 - CLEAR COPY updated

TEACHER COUNSELING START  AUG 3 rd,    
NEW TRANSFER FORMS 2016 - DEE & DSE ..CLEAR COPY updated

மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு  

தமிழக பட்ஜெட் 2016-17 சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

Tuesday 19 July 2016

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் : நான்கு ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் : நான்கு ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' 

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான புகாரில், இரண்டு தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது சென்னையில் இருந்து இணை இயக்குனர்கள், மாவட்ட வாரியாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். 


மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட பொதுத்தேர்வுக்கான அதிகாரியாகவும் நிர்ணயிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளின் போது, சென்னையில் இருந்து சென்ற பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் குழு, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் தேர்வு அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதில், பள்ளி தேர்வு மையங்களில், ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களில், ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடைத்தாள்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர் உமா ஆகியோர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. 

வேதியியல் விடைத்தாளில், ஒரு மதிப்பெண்ணுக்கான, 30 வினாக்களின் பதில்களை, ஒரே நபர் ஆள் மாறாட்டம் செய்து எழுதியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த விடைத்தாள்களின் பிரதிகள், சென்னையில் உள்ள தமிழக தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு கையெழுத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அத்துடன் கையெழுத்து நிபுணர்களும் ஆய்வு செய்ததில், ஐந்து விடைத்தாள்களில் உள்ள கையெழுத்து, ஒரே நபருடையது என தெரியவந்தது. அந்த நபர் ஆசிரியரா; தேர்வு மைய அதிகாரியா; தேர்வு அறை கண்காணிப்பாளரா; மாணவரா என விசாரணை நடந்து வருகிறது.

இந்த பிரச்னை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அய்யணன்விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்படி, நான்கு ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். ஈரோடு, மாத்துார் அரசு மாடல் (முன் மாதிரி) மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல்.நசீர்; டி.ஜி.புதுார், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்ஜோசப் சகாயராஜ்; பவானி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியர் முருகன், இயற்பியல் முதுநிலை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

RTI - ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .

RTI - ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .


Monday 18 July 2016

EMIS-STUDENT DATA ONLINE ENTRY OPEND 2016-17

EMIS- STUDENT DATA ONLINE ENTRY OPEND 2016-17





RTI :SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE REGARDING NEW RTI COPY

 RTI :SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE



REGARDING NEW RTI COPY.



CLICK HERE ...SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE REGARDING NEW RTI COPY... 




இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்.

இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்.
மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், 'உதான்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் ஏழை மாணவ, மாணவியரும் சேர்ந்து இலவச கல்வி கற்கும் திட்டத்தை, 'உதான்' திட்டம் என்ற பெயரில், 2014ல் மத்தியஅரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தில், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அவர்களது தந்தையின் ஆண்டு வருமானம், ஆறு லட்சத்துக்கு குறைவாக இருக்கும் நிலையில், அவர்களுக்குபிளஸ் 1 முதல் இலவச பயிற்சி தரப்படுகிறது.நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெற்று, அதில் தேர்வு செய்யப்படும் மாணவியருக்கு அவரவர் ஊர்களில், மத்திய அரசின் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.பின், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று, நுழைவுத்தேர்வில் தேர்வாகும், 1,000 மாணவியருக்கு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜினியரிங் படிப்புகளை இலவசமாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படிக்கும் மாணவியர் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு, 'ஆன்லைன்' மற்றும் நேரடி பயிற்சி தரப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவியர், 10ம் வகுப்புதேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 பாடப்பிரிவில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.நடப்பு ஆண்டில், இந்த திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜூலை, 4ல் துவங்கி, 13ம் தேதி முடிவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 20ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க விரும்புவோர், http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற சந்தேகமும் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய செயல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷிவ்கோபால் மிஸ்ராவிடம் கேட்ட போது, ஜூலை மாதம் முதல் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கான அரசாணை இன்று அல்லது அடுத்த வார துவக்கத்தில் வெளியிடப்படலாம். முதலில் அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும். பின்னர் பல்வேறு கமிட்டிகள் அளித்துள்ள பரிந்துரைகள், கோரிக்கைள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை
சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் இருந்தபோதும், தேர்ச்சி என்று வரும்போது பின்னடவு ஏற்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தற்போதுபள்ளி கல்வித் துறை பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இலக்கு இல்லாமல் வகுப்பறைகளில் உட்காந்திருக்கும் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் ஊக்கப்படுத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம் ஓரிரு வாரங்களில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக அனைத்து அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி

 அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்துறை சிறப்பு நிபுணர்களை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து குறிப்பிட்ட தேதியில் அழைத்து கொள்ளலாம்.
 நான்கு பிராந்தியங்களில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் காலை வேளையில் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.
 மாணவர்களின் பொறுமையை சோதிக்க வைக்காமல், முதல் 25 நிமிடங்கள் சிறப்பு நிபுணரின் உரையாகவும், அடுத்த 35 நிமிடங்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் கலந்துரையாடலாகவும் கட்டாயம் அமைய வேண்டும்.
 கலந்துரையாடல் நிகழ்வு 35 நிமிடங்களில், கதை சொல்லல், வினாடி வினா, செயல்முறைகள், வீடியோ வெளியீடு, திரைகாட்சிகள் ஒளிபரப்பு என்ற முறையில் பவர் பாயின்டாககூட அமையலாம்.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசியம், வளர்ச்சி, நல்ல நிர்வாகம் வாழ்வியல் நெறிமுறைகள், நற்சிந்தனைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசலாம்.
 சிறப்பு விருந்தினரின் பேச்சு, மதம், அரசியலை கடந்ததாக, அரசு நிர்வாகத்தை விமர்சிக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
 இதற்காக எந்த கட்டணமும் சிறப்பு விருந்தினர்களுக்குகிடையாது. தன்னார்வலராக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டவே முடியும்.

இத்திட்டத்தின் கீழ், வாழ்வில் முன்னேறிய டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.இருப்பினும், அரசு பள்ளிகள் வேறு திட்டத்தில் இறங்கியுள்ளன. அரசு பள்ளியில் படித்த பலர் வாழ்வில் சிகரத்தை தொட்டு நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள், பல்வேறு துறைகளில் உயர் பதவிகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.அதுபோன்ற புகழ் பெற்ற பிரமுகர்களை அடையாளம் கண்டு, அதே பள்ளியில் கலந்துரையாட வைப்பதே மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என, கருதி, பெரும்பாலான அரசுபள்ளிகள், அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.