Powered By Blogger

Tuesday 6 December 2016

பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அரசின் சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று முதல் மூன்று நாட்கள், தமிழகத்திலுள்ள அனைத்து, அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், 'பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறந்ததும், தேர்வு தேதி அறிவிக்கப் படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment