Powered By Blogger

Tuesday 22 December 2015

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது
தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழு மிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. 


டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வதுசனிக்கிழமை என்பதால் விடுமுறை.தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. மேலும் கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.நீண்ட நாட்கள் விடுமுறைக்கு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தான்பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்வங்கிகளும் 4 நாட்கள் செயல்படாது என்பதால் பொதுமக்களுக்கு சற்றுசிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment