Powered By Blogger

Wednesday 15 February 2017

TAMS-புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி பிரிவு 80 CCCD1(B) ன் படி CPS தொகையில் மேலும் தனிக்கழிவாக ரூ.50000/- ஐ கழித்து கொள்வது குறித்து தெளிவு வழங்குதல் சார்ந்து*

*தமிழக அரசு ஊழியர்கள்,மற்றும் ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு வருமான வரி பிரிவு 80 CCCD1(B) ன் படி  CPS தொகையில் மேலும் தனிக்கழிவாக ரூ.50000/- ஐ கழித்து கொள்வது குறித்து தெளிவு வழங்குதல் சார்ந்து*             """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க  மாநில தலைவர் திரு.*கு.தியாகராஜன்*,அவர்களது அலோசனை பேரின் நமது மாநில பொதுச் செயலர் *திரு.ஏ.இரமேஷ்* அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள மாநில கருவூல அதிகாரியை தொடர்பு கொண்டு மத்திய அரசின் வருமானவரி 2015-ன் படி விரிவுபடுத்தப்பட்ட 80 Ccd section. கீழ் உள்ள 80 CCD 1,80 CCD1 B,80CCD2 என்ற பிரிவுகளில் CPS -ல் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, பிரிவு 80 C-ன் படி வருமான சேமிப்பு ரூ. 150000/- க்கு மேல் உள்ளவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்கள் செலுத்திய  CPS பணத்தில் ரூ.50000/- ம் வரை தனிக்கழிவாக கழித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது என்பதனை மாநில கருவூல அலுவலர் அவர்களுக்கு எடுத்துக்கூறி CPS ல் ஒருவர் செலுத்திய பனத்தை 80CCD1B- ல் தனிக்கழிவாக ரூ.50000/- கழித்துகொள்ள கோரிக்கை வைத்தார்.    
Click Here Tams request letter
   
Click Here mail from state Income Tax off for CPS deduction up to 50_000

இதனை அடுத்து மாநில கருவூல அதிகாரிகள் 2015 ன்படி விரிவுபடுத்தப்பட்ட IT Rule அறிக்கையின் படி உள்ள விதிகளை ஆராய்ந்து தங்களது கோரிக்கையை ஏற்பதாகவும் கூறினார்.


   மேலும் மாநில கருவூல அலுவலர் அவர்கள், மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு CPS தொகையை தனிக்கழிவாக மேலும் ரூ.50000 /- வரை பிரிவு 80CCCD 1 (B) -ன் படி கழித்து கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட சார் கருவூலகங்களுக்கு தகவல் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.          

 இது தொடர்பாக இன்று 15.02.17 மாலை மீண்டும் வேலூர் மாவட்ட கருவூல அதிகாரியை தொடர்பு கொண்டு இது தொடர்பாக எடுத்துக் கூறினோம்.

மாவட்ட கருவூல அதிகரியும் மாநில கருவூல அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்ததாகவும் இதனை வேலூர் மாவட்ட அனைத்து சார்கருவூலகங்களுக்கும் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.  

எனவே CPS திட்டத்தின் கீழ் உள்ள ஆசிரிய பெருமக்கள் மேற்கூறிய 80 CCD1 B பிரிவின்படி மேலும் ரூ.50000/- வரை கழித்துக் கொள்ளலாம் என்று கூறினார்,


 மேலும் சார் கருவூல அலுவலர்கள் ஏதேனும் மறுப்போ சந்தேகமோ இருப்பின்  Vellore dt 0416-2253106 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.


  தொடர் முயற்சிகள் மேற்க்கொண்டு 2004 க்கு பிறகு CPS திட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கு வெற்றி தேடிதந்த நமது சங்க மாநில பொதுச் செயலாளர் *திரு.ஏ.இரமேஷ்* அவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட செயலர் "திரு.உதுமான்* அவர்களுக்கும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட தமிழகத்தின் அனைத்து *மாவட்ட, ஒன்றிய பொருப்பாள்களுக்கும்* வேலூர் மாவட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்          

   இவண். *G. D.பாபு*மாவட்ட செயலர்,

த.ஆ.மு.சங்கம்  வேலூர் மாவட்டம்

மற்றும்
மு.சிவக்குமார்,தலைவர்,திருப்பத்தூர்.

No comments:

Post a Comment