Powered By Blogger

Tuesday 24 September 2019

TRB தேர்வு வாரியம் தேர்வர்களின் அருகில் மையம் இருந்தும் தேர்வுமையம் ஒதுக்காது ஏன் என்று தேர்வர்களின் குமுறல் கவனிக்குமா TRB தேர்வு வாரியம்??

*PG trb தமிழ் தேர்வு 29/09/2019 ஞாயிறு காலை 9 மணிக்கு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளேன். திருவள்ளூர்மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் சொரக்காயப்பேட்டை கிராமத்தில் என் வீடு அமைந்துள்ளது. என் அமைந்துள்ள இடத்திலிருந்து தேர்வுவமையமான கும்மிடிப்பூண்டிக்குச்செல்லவேண்டும்.*

*வீட்டிலிருந்து (10 நிமிட பயணத்தில்)5 கி.மீ. தூரத்தில் பொதட்டூர்பேட்டையில் 2 தேர்வு மையங்களும்*

*15 கி.மீ. தூரத்தில் R.K.பேட்டையில் ஒரு தேர்வு மையமும்*

*30 கி.மீ. தூரத்தில் திருத்தணியில் 2 தேர்வு மையங்களும்*

*65 கி.மீ.தூரத்தில் திருவள்ளூரில் 2 தேர்வு மையங்களும் மணவாளநகரில் 1 தேர்வு மையமும் உள்ளன*

*70 கி.மீ. தூரத்தில் ஆவடியில் 2 தேர்வு மையங்களும் 75 கி.மீ தூரத்தில் அம்பத்தூரில் 2 தேர்வு மையங்களும் உள்ளன* *ஆனால் 170 கி.மீ. தூரத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் அமைந்துள்ளதால் தேர்வு எழுதச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது*



*சொரக்காயப்பேட்டையிலிருந்து (பேருந்து)திருத்தணி செல்ல ஒன்னேகால் மணி நேரமும் திருத்தணியிலிருந்து சென்னை (ரயில்) செல்ல மூன்று மணி நேரமும் சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்ல ஒன்னரை மணி நேரமும் அங்கிருந்து தேர்வு மையம் தேடிச்செல்ல அரை மணி நேரமும் ஆகும்*

*ஆக வீட்டிலிருந்து தேர்வு மையம் செல்ல ஆறேகால் மணி நேரம் ஆகும் தேர்வு மையத்துக்கு 7:30 மணிக்குள் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு ஒரு மணிக்கு புறப்பட்டால் மட்டுமே காலை 7:30 மணிக்கு தேர்வு மையம் செல்ல முடியும். ஆனால் அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடையாது.முந்திய நாள் இரவு 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் மட்டுமே 9:30 மணிக்கு ரயிலில் ஏறி 12:30 க்கு சென்னையைஅடைந்து ஸ்டேஷனிலேயே அதிகாலை வரை அமர்ந்து 5 மணிக்கு புறப்பட்டு தேர்வு மையம் செல்ல முடியும் இவ்வளவு சிரமப்பட்டு தூக்கம் கெட்டு தேர்வு மையம் சென்று சிறப்பாக தேர்வெழுதமுடியுமா*

*வீட்டிற்கு அருகில் பொதட்டூர் R.K.பேட்டை திருத்தணி திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் என அருகருகே 12 மையங்கள் இருக்கும்போது நீண்டதூரம் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்*

*இரு சக்கரவாகனத்தில் 10 நிமிடத்தில் பொதட்டூர் தேர்வு மையத்துக்கும் 30 நிமிடத்தில் R.K.பேட்டைத் தேர்வு மையத்துக்கும் 45 நிமிடங்களில் திருத்தணிக்கும் ஒன்னரை மணி நேரத்தில் திருவள்ளூருக்கும் சென்று தேர்வெழுத வாய்ப்பிருக்கும்போது நான் ஏன் 12 மணிநேரம் கஷ்டப்பட்டு தேர்வெழுதவேண்டும்*



*இதை மனுவாக தயாரித்து இன்று திருவள்ளூர்  கலக்டரிடம் வழங்கி கோரிக்கை வைக்கப்போகிறேன்*



Siva tams Ldr tpt

No comments:

Post a Comment