Powered By Blogger

Friday 12 February 2016

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:


எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒருசில மாவட்டங்களில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச் சிப் பெற தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டி யது ஒவ்வொரு பள்ளித் தலை மையாசிரியரின் கடமையாகும். பொதுத் தேர்வு நெருங்கும் நேரத் தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் தலை மையாசிரியர்கள் மீது கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட் டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment