Powered By Blogger

Friday 12 February 2016

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது.    தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள். 

குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு -அங்கன்வாடிப்  பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என்றுதொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராடுபவர்களின் நெருக்கடியான நிலைகள் குறித்து நானும்,தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளும் எடுத்துக் காட்டியும்  அவர்களை முதல்வர் அழைத்துப் பேசவில்லை.அதிமுக அரசின் வரலாற்றை  அறிந்திருக்கும்  அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு அங்கன்வாடி அலுவலர்களும், வணிகவரித் துறை அலுவலர்களும், வருவாய்த் துறை அலுவலர்களும்  தொடர்ந்து  போராட்டம் நடத்துவதன்  மூலம் இப்போது   எந்தப் பயனும் நேர்ந்து விடப் போவதில்லை.

எனவே  போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத்  திரும்பப் பெற்றுக் கொண்டு,  பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும்  நல்லது.காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர் என கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment