Powered By Blogger

Friday 12 February 2016

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை

ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதால் கல்விப்பணி பாதிக்கிறது தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆசிரியர்கள் சங்கம்கோரிக்கை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சென்னையில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–


ஆண்டுமுழுவதும் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மாணவர்களுக்கு நிறைவாக கல்விப்போதிக்க முடிவதில்லை. கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்து, தேர்தல் பணிக்காக தனியாக நிரந்தர பணியாளர்கள நியமிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

No comments:

Post a Comment