Powered By Blogger

Saturday 3 September 2016

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களை வாழ்த்தும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

*டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களை வாழ்த்தும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

மாதா,பிதா,குரு,தெயவம் என்பதற்கேற்ப ஆசிரியர்கள் பணி உன்னத பணி. அப்பணியை சிறப்பாக செய்த ஆசிரியர்களுக்கு,
ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர்! அவர் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள், "ஆசிரியர் தினம்" என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் விருது பெரும் அனைத்து ஆசிரியர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

 *அனைவரையும் வாழ்த்துகிறோம்.* 

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*  மற்றும்

மாநில,மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாகவும்,
அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*அன்புடன்*

*கு.தியாகராஜன்,* மாநில தலைவர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

*ஜி.டி.பாபு,* மாவட்ட செயலர், வேலூர் மாவட்டம்.

*மு.சிவக்குமார், ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்.

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

உடன்
*ALL TRS TN... Siva*

No comments:

Post a Comment