Powered By Blogger

Saturday 17 September 2016

ஜாக்டோ பொருப்பாளர்களே மற்றும் அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே!* *விழித்திடுங்கள்..*

*ஜாக்டோ பொருப்பாளர்களே
 மற்றும் அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே!* *விழித்திடுங்கள்..*

 *கடந்த 5 ஆண்டு போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத அ.தி.மு.க ஆட்சி* மீண்டும் ஆட்சி அமைந்துவிட்டது.
 *ஜாக்டோ அமைப்பு ஆரம்பத்தில் பீனிக்ஸ் பறவைபோல் வீரு கொண்டு*
 கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் செய்த்து. சி.பி.எஸ் யை உள்ளடக்கிய ஆசிரியர்களின் கோரிக்கையை தாங்கி போராடியது. 

 மாணவர்கள் நலன் கருதியும், மக்கள் நலன் மற்றும் தேர்தல் கருத்தில் கொண்டும் *போராட்டம் 3 மாதங்களுக்கு தள்ளி வைத்தது.* மீண்டும் புதிய ஆட்சி அமைந்த்தும் ஆக்ஸ்ட் மாதத்தில் மீண்டும் போராட்டம் நடத்தலாம் என நம் அமைப்பு கூறியது.
 *ஆனால் ஜாக்டோ பொறுப்பாளர்கள் இது வரை எந்த ஒரு அறிவிப்பும் கூறவில்லை*. இதுவரை கூடியம் பேசவில்லை.

*வல்லுநர் குழு என்பது ஒரு கண்துடைப்பை அரசு நமது போராட்டத்தின் வீரியம் குறிப்பதாகும்* ஆசிரியர்கள் உணர்வை புரிந்து சிபிஎஸ்..ஐ ஒழிக்க மீண்டும் போராடத்தான் வேண்டும். *வல்லுநர் குழு சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை இல்லை* அதில் உள்ள குறைகளை மட்டும் கூறுங்கள் என்றால் அரசு கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னாச்சு..அப்ப..சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான சாத்தியக்கூறு அரசிடம் இல்லை என்பதாகும். *எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜாக்டோவை கூட்டி சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான* வழிகளை ஆராய்ந்து சரியான திட்டமிட்டு விரைவாக *போராட்டத்தை மீண்டும் நடத்த ஜாக்டோ பொறுப்பாளர்கள்* விழிப்புடன் செயல்பட அன்போடு ஆசிரிர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*

 அனைத்து சங்கத்தின் கொள்கை வேறு வேறாக இருந்தாலும் அனைத்தும் ஆசிரியர்கள் நலம் ஒன்றேதான். *சி.பி.எஸ்-யை ஒழிக்க வேண்டும்* என்று மாநில முதல் மத்திய அரசு வரையில் உள்ள பல சங்கங்கள் போராடியது. அனால் தொடர்ந்து போராரவில்லை. 

 *சி.பி.எஸ்ஐ ஒழிக்க அனைவரும் பலமான போராட்டம் செய்ய தயாராக வேண்டும்.*  போராட்டம் என்பது வாழ்கை, போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை இதுவரை பெற்ற அனைத்தும் போராட்டத்தினால் கிடைத்தவையே. நமக்கு நாமே போராடவேண்டும். 
*எனவே ஜாக்டோ பொருப்பாளர்களே மற்றும் ஆசிரிய நண்பர்களே போராட்டதை திட்டமிட்டு விரைவாக அறிவிக்க வேண்டும்.*
ஒன்றினைந்து போராட  ஆசிரியர்கள்  தயாராக இருக்க வேண்டும்.
 ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்.

*அன்புடன்: மு.சிவக்குமார். ப.ஆ*
ஆல் டீச்சர்ஸ் டிஎன்.

No comments:

Post a Comment