Powered By Blogger

Sunday 17 July 2016

ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி...

ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி ஜூலை 18-ம் தேதி முதல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.

 ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்டு 1-ம் தேதிவரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளியே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களிலும் மதிப்பெண் சான்று தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment