Powered By Blogger

Wednesday 10 August 2016

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

மசோதா குறித்து படிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்பையும் மீறி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம்; சாலை விபத்தில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு; அதிக வேகமாக வாகனத்தை ஓட்டினால், 4,000 ரூபாய் அபராதம்; ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment