Powered By Blogger

Tuesday 30 August 2016

தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல் !

தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல் !
ஆந்திர கடற்பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து ஆந்திர கடற்பகுதியில் நிலை


கொண்டுள்ளது.இதனால், தமிழக கடலோர மாவட்டங்களிலும், தென்மேற்கு பருவமழையால் மற்ற மாவட்டங்களிலும், மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலுார், சென்னை, கோவை, கடலுார், புதுச்சேரி, காரைக்கால், சேலம், நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

No comments:

Post a Comment